Saturday, May 5, 2012

மாலையில் “காதல்” உதயமாகிறது...


அந்திச் சூரியன்
மலைகளுக்குள் ஒழிந்துகொள்ள
என் அகத்தின் எண்ணங்கள்
உன்நினைவோடு அலைமோத
என் ஐம்புலங்களின் ஆட்டம்
அடங்கி மௌனித்து விடுகிறது
உன்னை சுமக்கின்ற இதயம்
பார்க்கவும் துடிக்கிறது
ஜன்னலில் மறைந்து செல்லும்
உருவமொன்றை - என்னுயிர்
கண்டிடத் துடிக்கிறது..
என்தேகத்தை ஆழுகின்ற “உயிர்”
உன் மௌனராகத்தில் துடிக்கிறது
நீ இல்லாத நேரங்களானாலும்
உன் தெருவினிலேயே நடப்பதை - என்
உள்ளம் சுகமாய் நினைக்கிறது..
நீ என்னைப் பார்த்துப்போன இடங்களில்
நான் என்னைத் தேடிப்பபார்க்கிறேன்
நீ நடந்து போன இடங்களில்
உன் கால்த் தடங்களைப் பார்க்கிறேன்..
உன்னை நான் காணவரும்
ஒரு நிமிடத்துக்குள்..
ஒரு யுக வாழ்கையை
முடித்துவிட்டுத்தான் வருகிறேன்..
உன்னைக்காணாத இடைவெளிகளுக்குள்
என்னுயிர் நசுக்கப்பட்டு விடுகிறது..
உன்னை நினைக்கின்ற நிமிடங்களில்
ஒரு யுகம் கூட ஒரு சிறுதுளியாகிவிடுகிறது.. 

சிறைப்பட்ட “காதல்”


நெஞ்சுக் கூண்டின் ஒப்பாரியின் ஓசை
இதயம் கதறி அழுதுகொண்டிருக்கிறது
இரவுகளும் துணையிருக்க மறுக்கிறது
நிசப்தமாய் உறங்கிய உணர்வுகள்
உன் திண்ணையில் தஞ்சம் தேடுகிறது..
உன் நினைவுகள் ராகமாய் எழும்போது
என் உணர்வுகள் உன் நினைவுகளையே
சலங்கை கட்டி ஆடிக்கொள்கிறது..
காற்றோடு மலர் கலந்துறவாடுவது போல்
உன்னைப்பற்றிய சிந்தைகளுடனேயே
என் மனம் கலந்துறவாடிக்கொள்கிறது
காகிதத்தில் மேடையமைத்து
அதை தண்ணீரீல் மெதக்கவிட்டு
அதன் மேல் ஆடிக்கொண்டிருக்கும்
நிலையாகிப்போனது என் காதல்
சொல்லவும் மெல்லவும் முடியாமல்
தொண்டைக் குழிக்கும் எனக்கும்
போராட்டம் சூடு பிடித்து விட்டது..
கல்லறையில் சாதிக்கின்ற காதல்கள்
இவைகளை சந்தித்துதான் இருக்கவேண்டும்
இல்லையென்றால் சாதனை ஏது...?
சமாதியில் என் காதல் மலர்ந்து கொள்ள
நான் ஆசை கொள்ளவில்லை..
உன் மனதோடு ஒட்டி மலர்ந்திடவே
என் மனம் உன்னை நாடியே துடிக்கிறது..
காதலை சொல்லிக் கொள்ளும் வரை
சிறையில் சித்திரவதை தேவையில்லை
இந்த வேதனையே பெரிதாகிவிட்டது..

நேரம் நெருங்கி வருகிறது...


நாம் புறப்பட நேரமாகிவிட்டது
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..
வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்..
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்கிறது
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடு
எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...
தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது
பலமானவர்களின் செயலாகயிருக்காது..
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....

உன்மௌனமே திரையாகிறது


என்னுயிர் நீங்கிடாது போக
உன் பார்வையாலேயே
என்னுயிரைத் துண்டாடுகிறாய்
என் மனதைக் கிள்ளிவிடும்
உன் மௌன பாசையில்
என் நினைவுகளைப் பந்தாடுகிறாய்
நீ என் நினைவுகளில்
நெருங்கி வந்து நிற்கையில்
மொழிகளை மௌனிக்கச் செய்து
உணர்வுகளை பற்றவைக்கிறாய்
உன் மௌனமே திரையாகிவிட
திறந்திருக்கும் என் இதயவறையோ
உன் விடைவாசல் தேடித்தவிக்கிறது
உன்விழிகளைத் திறப்பதற்குப்பதிலாக
உன் இதயத்தை திறந்துபார்
அதன் அருகினில் என் உராய்வுகள்
வீற்றிருப்பதை நீ உணர்ந்துகொள்வாய்
மலரிலும் மென்மையானது காதல்
ஆனால் மலையிலும் பாரமானதுமே..
நான் மலையில் மலர்ந்திடவே நினைக்கிறேன்
“மலர்களை எரிப்பது முறையில்லை” என்று
கவிப்பேரரசு சொன்னது சரியென்றால்
என்னை நீ வதைப்பதும் முறையல்லவே..
முத்தெடுக்கச்சொல் மூழ்கிப்பார்க்கிறேன்
முள்ளில் உறங்கச்சொல் உறங்குகிறேன்
முகவரி நீயென்றால் எல்லாமே சாத்தியமே
“காதல்” எரிகின்ற தீயில்
குளிர்கின்ற சாதனம்
அதில் விறகாய் மட்டும்
என்னை வீசிச்செல்லாதே...

காதல் எழுதும் வேதம்


உலகம் ஏதுமில்லை
இதுதான் உலகமென்று
ஈருயிர்கள் எழுதுகின்ற வேதமிது...
சாகக்கூடத் தோன்றாது
உலகம் அழியாமலேயே
உயிர் வாழத்தோணும்..
ஒருவருக்கொருவர்
உயிரைப்பகிர்ந்து கொள்ளும்
உன்னத உறவு தோன்றும்..
கண்கள் கலங்காமல்
இதயமழுவதை ஆத்மார்த்மரீதியாய்
உணரத் தோணும்..
விடைகாண முடியாத
உயிரின் வலிகளை
உடலில் உணரத்தோணும்..
எனக்காய் அவளும்
அவளுக்காய் நானும்
அர்த்தம் புரியாமல் வாழத்தோணும்..
அவளோ நானோ
இல்லாத ஒரு நிமிடத்தில்கூட
இதயம் அனாதையாகிவிட்டதாய் தோணும்..
காலமும் நேரமும்
கறை காணாத தூரத்தில்
கடந்து விட்டதாய் தோணும்...
ஒரு நேரத்தில் மட்டும்
சாகலாமென்று தோன்றும்
ஒருவர்மீது ஒருவர்
சாய்ந்து கொள்ளும்போது....
“காதல்” வாழும்போதே
எம்முடன் உயிராய்வாழட்டும்
உடல் இறந்து “காதல்“
உயிர்வாழ நான் விரும்பவில்லை..

புலன்களையாழுகின்ற காதல்


புலன் விசாரணையொன்றை
நான் நடத்துகிறேன்
என் புலன்களை ஆழுகின்ற
ஒரு பூவொன்று பிறந்ததென்று..
கண்டெடுத்த பின் என்கனவிலும்
மணம் வீசுகின்றாய் பெண்ணே...
கனவிலும் நான் கவிஞனானேன்
உன்னை தேவதையாய் கண்டபோது..
உன்தோள் புயங்களில் விழுந்து
தழம்புகின்ற உன் கூந்தலுக்குள்ளே..
ஒழிந்து கொள்ளும் உன் நிலாமுகம்
என்நெஞ்சனிலே பவனி வருகிறது..
உன்னுடனேயே பயணிக்கும்
உன்னைப்பற்றிய எனது நினைவுகள்
வழி தடுமாறித் தவிக்கிறது..
தாமரை இலையில் நடனமாடும்
தண்ணீரில் துளிகளைப் போல்
என் சிந்தையில் நடனமாடும்
உன் நினைவுத் துளிகள் - என்
காதல் தாகத்தை தீர்த்திடுமோ...?

இருளிலும் விடிகின்ற நீ...


நிலவொன்று நடந்து வருகின்ற அதிசயமும்
அழியாத ஒவியமாய் என்னிதயத்தில்
அதன் பாதச்சுவடுகள் பதிந்து வருகின்ற
இனனோர் அதிசயமும்
காதலில்தான் உள்ளதோ...?
வளர்பிறையும் தேய்பிறையும் - உனது
ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுகிறது
அதேபோல்தான் என்னை அழவைப்பதும்
சிரிக்கவைப்பதும் உனது இன்பமாய்யுள்ளதோ..?
நிலவென்று இதனால்தான் சொன்னார்களா
நீ இருட்டுக்கு மட்டும்தான் அழகானவளா..?
இல்லை என்னிதயத்தின் சுடர் விளக்கு
உன்கை பட்டுத்தான் எரியவிருக்கிறதோ..?
என்நெஞ்சுருண்டைக்குள் சுழன்றுவருகிற
வெண்ணிலாச்சுடர் நீதான் பெண்ணே..
நீ வீசுகின்ற ஒளியில்தான் என்ஜீவனில்
ரீங்காரம் விடாமல் ஒலிக்கிறது பெண்ணே..
என்ஜீவனில் விழுந்து மறைகின்ற
உனது நிலாமுகம் என்னுள்ளத்தை
வெளிக்கின்ற செவ்வானமாய்
மாற்றியமைத்து விடுகிறது பெண்ணே..
என் இருண்டுபோன மதி முழுவதும்
உன் முழுமதி உலா வருகிறது
என் இருளும் ஒளியும்
இனி உன்னால்தான் பெண்ணே..
இருளில் விடிகின்ற நீ
விடிந்ததும் மறைந்து விடாதே
நான் மறையும் வரை இருளாகவே
நீடித்திருப்பேன் பெண்ணே...

எரிகின்ற ஈழத்தின் இருதயங்கள்


அழகாய் ஒரு பாதையமைத்து
அதன் நெடுகினில் முட்களை வீசுகிற
சூட்சமக்காரர்கள் நிறைந்த உலகமிது
தரணியில் நாலா திசைகளிலும்
விச அமிலங்களைக் கலந்தெடுத்த
பன்னீரைத் தூவுகின்ற மகான்கள்
விரைந்து வருகின்ற காலமிது
யான் முந்திட வேண்டுமென்பதற்காக
யாதாயினும் சரிதானெனச்செய்து விட்டு
ஐக்கியமாகும் ஜனனாயகம்தான் இங்கு...!
நீதியின் கண்கள் மூடப்பட்டபோதிலும்
அதன் ஞானம் திறக்கப்படாமலில்லை
காத்திருக்கிறோம் எங்களுக்கும்
கதவுகள் திறக்கப்படத்தான் இருக்கிறது..
தாயகத்தாகத்தை சுமந்து கொண்டு
தண்ணீர்க் குவழையை தவறவிட்ட சேதி
தரணியின் முடிவு வரையிலும் சான்றுபயிலும்
எங்களின் சரித்திர வரலாறுகள்..
எங்களின் ஈழத்தின் இருதயங்கள்
கொழுந்து விட்டு எரிகின்ற நிலையிலும்
அதி்ல் உருகின்ற ஒவ்வொரு துளியும்
இன்னோர் உயிரை தாரைவார்த்திடுமே..
புரட்சியில் துயில்ந்துபோன உயிர்கள்
புகழுக்காய் துறந்தவையல்ல..
தாயகத்தியாகத்தை அரிந்திக்கொண்டே
தன்னுயிர்வீசி வீரீயமானவைகள்
இப்பாதையில் பெருமுட்களை காலிலும்
ஆறாத வடுக்களை உடம்பினிலும்
தாங்கிக்கொண்டே தாண்டிய பயணம்
இதில் இனியேது இன்னுமின்னும்...
ஒரு இழப்பில்தான் இன்னோர் வருகை
வருவதாக நியதி உண்டென்றால்..
நாங்களும் அடையத்தான் இருக்கிறோம்
இழப்பின் கைம்பேரியங்களை....

ஒரு கலைஞனின் தேடல்


என் விரல்முனைகளோடு செல்லுகின்ற
என் சிந்தனையின் வரிகளனைத்தையும்
அதையெழுதுகின்ற பேனாமுனையறியும்
எண்ணத்தில் எழுகின்ற எழுத்தின் எழுச்சி
பலகைகள் ஓங்கியடிக்கும் ஓசையில்தான் உள்ளது
நான் ஒரு இருட்டறையில் ஒழிந்துகொண்டு
நன்றாய் எழுதுகின்ற பலகலைஞர்களின் ரசிகன்
என்பேனா முனைகள் அறிந்துகொண்ட
என் சிந்தனையின் சிதறல்களனைத்தும்
இத்தரணியில் சிந்திட நானும் முனைகிறேன்
என்னுள் ஒழிந்து கொண்ட கனிகளை
நான் பொறுக்கியெடுத்து வீசுகிறேன்
அது அழுகிப்போவதும் அழகாய்ப்போவதும்
உங்கள் கைகளிலேயே உள்ளது..
உளி ஊண்டிப்பதிவதனால்தான்
உருவமொன்று அறிமுகமாகிறது
அதைப்பிடிக்கின்ற கைகள் தவறும்போது
கற்களாகவே அதுகிடக்கின்றன..
தேடுவதனால்தான் நான் கலைஞனாகிறேன்
தேடியவையை நீங்கள் தீட்டும்போதுதான்
மதிகூராகி கலைகளை நருக்கிச்செல்கிறது..
இதில் சிந்தனைகள் சிலநேரம்
தடுமாறி விழும்போது - என்
என் எழுத்துக்களும் சிதறிவிடக்கூடும்
அதை நீ மன்னித்து விடும்போதுதான்
உன்னில் உண்மையான கலைஞனை
நான் காண்கிறேன்.....

முள்ளில் உறங்கும் உயிர்...


என்னுயிரில் அறையப்பட்ட
உன் உயிர்ச் சிலுவை
என்றும் இறங்காது பெண்ணே..
என்னுயிரில் கலந்த
உயிர் ஓவியம் நீதான்...
என்னுணர்வுகளின்
உயிர் ஆயுதமும் நீதான்..
என்னுடலைக் கிழித்து
உயிர் வாங்கியவளும் நீதான்..
அதை அலையவிட்டு
அழகு பார்ப்பவளும் நீதான்..
முள்ளில் படுக்கையிட்டு
கம்பளியால் தடவுகிறாய்
சுகங்களைக் காணவைத்து
துடிக்கவைக்கும் இன்பமதில்...
என்னில் உன்னைப் பதிந்த
சிற்பியாவேன் நான்
நீயோ என்னை சிதைக்கிறாய்
கள்ளிச்செடி உண்ட உணர்வு
உள்ளத்தில் தெரிகிறது
நரகத்தில் இருந்து கொண்டே
நாட்களை எண்ணுவதாகிறது..
சொல்லாத காதல்
முள்ளில் உறங்கும் உயிராய்
துடித்துக்கொண்டே இருக்கும்
சொல்லி விட்டபின்
காதலின் உயிரை
தீயில் எரித்தாலும்
அது தாங்குமடி பெண்ணே...

Saturday, March 10, 2012

ஒரு அக்கினி மேடை



பத்துமாத விசப்பரிட்சையில்
விடைகண்ட வித்துக்கள் நாம்
அவள் எழுதிய விடைகளில்
பிழைகாணாத வினாக்கள் நாம்

எம்மைச்செதுக்க அடிவாங்கும்
தேய்ந்து போன உளியாவாள்..
எம்மை வளர்க்க உருகிப்போகும்
எரிகின்ற மெழுகாவாள்....

எம் கண்கள் அழும்போது
இதயத்தால் அழுதிடுவாள்..
எம்மிதயம் அழும்போது
உயிர் உருகிவிடுவாள்...

தாயே உன்னைத்தாங்கும் சுவனம்
என்னதான் தவம்கள் செய்தனவோ..
நானும் அச்சுவனம் காணவேண்டும்
உன் பாதங்களை மெதுவாக விலக்கு

உனக்கு பணிவிடைசெய்யவே
இன்னொரு யுகம் வேண்டுகிறேன்
என்னைப் படைத்தவனிடம்
அப்போதும் என்பணி தீராது..
தாயே உன்னிடைவெளி நிரப்ப
இத்தரணியில் ஏதேனும் உண்டோ...?

உன்காதல் ஒன்றேதான்
உலகத்தில் உயர்வானது
உன் உறவொன்றேதான்
உலகத்தில் உயிரானது..

உயிர்களுக்கு விலாசமும்
உறவுகளுக்கு சிறப்பும்
உன்னால் ஆனதம்மா..

ஒரு அக்கினி மேடையில்
அறிமுகமானவர்கள் நாம்
அதே மேடையில் இன்றுவரை
ஆடிக்கொண்டிருப்பவள்தான் தாய்...

காதல் புத்தகம்



ஒரு புத்தகத்தின்
தலைப்பு இது
காதலும் மரணமும்
முகவுரை..!

காதல் மரணத்தின்
விலாசமென்றும்
மரணம் காதலின்
விலாசமென்றுமிருந்தேன்

நான் மரணம் வென்ற
காதல் மாணவன்
இதையெழுதும்
இப்பேனாமுனை...
என் உயிர்த்துணை
எனக்கழித்த
காதலின் வெற்றி முனை...

உயிர்களால்
எழுதப்படும் காதல்
மரணத்தைக்
கடந்த பக்கங்கள்....
வெறும் அழகுக்காய்
எழுதப்படும் காதல்
அசிங்கத்தை
அரங்கேற்றிய பக்கங்கள்....

இருவர் சேர்ந்தெழுதும்
பக்கங்களில்
பூக்கள் கொட்டிக்கிடக்கும்....
ஒருவர் எழுதும்
பக்கங்களில்
முட்கள் நிறைந்து கிடக்கும்....

இருபக்கங்கள் இணையும்போது
படிக்கும் நேரம் நீண்டுசெல்லும்...
ஒருபக்கத்தை
படிக்க நேரம் சுருங்கிவிடும்....

இப்படியான பக்கங்களை
எழுதியவர்கள் ஏராளம்
விலாசம் காதல் ஒன்றே..

மொத்தத்தில்
“காதல்” மரணத்தின்
தொடக்கவுரை....
“மரணம்” காதலின்
முடிவுரை......

ஒரு கவிஞனின் காதல்



என்கண்களும் உன்நினைவுகளும்
விழுந்துவரும் அவ்வரிகளில்
மீண்டும் மீண்டும்
உன்னையே தேடுகின்றன..

வார்த்தைகள் உன்நினைவோடு
முட்டிக்கொள்ளும் போது
என்பேனா முனைகள்
அவ்வரிகளை தடக்கிவிடுகிறது..

சிலநேரங்களில்
நான் எழுதும்கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிக்கிறது
அப்போது நான் வெட்கித்துப்போவேன்
நீயே என்னைப்பார்ப்பதாய் நினைத்து

கவிதைக்கு அழகு பொய்யென்று
யார்தான் சொன்னது
அதற்கழகே நீதான் பெண்ணே..

என் கவிதையின்
வரிகள் ஒவ்வொன்றிலும்
உன்னைப்பற்றி எழுதுவதனால்
அது அழகு கொள்கிறது...

ஒரு கவிஞனின் அழகு
அவன் காதல்வரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் வீரம்
அவன் புரட்சிவரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் மனம்
அவன் சமூகவரிகளில் தெரியும்

ஆனால் என்னில் தெரிவதல்லாம்
நீயே நீ மட்டுமே....

ஒற்றைப்பனைமரம்



நிலாவரக்கிணற்றில்
கல்லெறிய ஆசை
அதன் ஆழம் சென்று
திரும்பிவர ஆசை

நெய்னாதீவுக்கு
நீந்திச்செல்ல ஆசை
அதன் நெடுகினில்
மீன்பிடிக்க ஆசை

காங்கேசன் துறையில்
குளிர்காய ஆசை
அதில் நிமிர்ந்துநிற்கும் மரநிழலில்
தங்கிவிட ஆசை

தென்னைத்தோப்புக்குள்
ஒழிந்து கொள்ள ஆசை
அதன் இளநீரைப்பறித்து
பருகிவிட ஆசை

தோட்டக்காரன் தடியெடுத்து
துரத்த ஆசை
நான் அவர்முன் தொடர்ந்து
ஓட ஆசை

ஓடில்லா கூரையால்
வானம்பார்க்க ஆசை
அதன் துண்டுகளை
உதட்டில் ஒட்ட ஆசை

ஓட்டைச்சுவர்களை
தடவிப்பார்க்க ஆசை
அதன்வழியே பச்சிலைகளை
பார்க்க ஆசை

ஓணான் பிடித்த வேலியை
ஒருமுறைபார்க்க ஆசை
அது ஒற்றைக்கம்புடன்
நிற்பதைக்காணவும் ஆசை

மண்ணின் புழுதியில் உருண்டு
விளையாட ஆசை
அதன் வாசனைகளை
முகர்ந்துகொள்ள ஆசை
அதனோடு கூடிவிளையாடிய
தோழனைக்காணவும் ஆசை

ஒற்றை பனையோடு
கதைகள் பேச ஆசை
அவைகளுள்ள தீவுகள்தான்
ஆசையோ ஆசை

ஓலைக்குடிசையில்
உறங்கிட ஆசை
அதன் தேவதைதான்
என் ஆசை

நிஜங்களை நினைத்துப்
பார்க்க ஆசை
அது நிழலாகிப்போனதை
நினைக்கையில்...
நெஞ்சினில்
ஒப்பாரியின் ஓசை.....

கல்லில் சாய்ந்துபோனது
பனைமரமல்ல
எனது பாரம்பரியமான
ஆசைகளும்தான்

தோப்பிலிருந்து தனித்து நின்ற
ஒற்றை பனையானாலும்
மண்ணின் எழுச்சி
உயரத்தில் தெரிந்தது

நான் தனித்து நிற்கும்
ஒற்றை பனை
என் ஓலைகள் உங்களை
வசிறி விடும்.....

ஏழையின் வெள்ளி விழா...



என் சிந்தனைகள்
என்மீது போர்தொடுத்து
என்னை விலக்கி விட்டு
எங்கங்கோ செல்கிறது..

எத்தனையோ கோட்டைக்கு
நான் சொந்தக்காரன்
அத்தனையையும் என் உள்ளம்
வடிவமைத்து கட்டியதே...

பலகோட்டைக்கு அதிபதி நான்
பணை ஓலைதான் என்விரிப்பு
பசியென்று வரும்போது கூட
பானையும் வற்றிப்போய் கிடக்கும்

என்னத்தில் கோடிகளின் வண்ணம்
உள்ளத்திளோ பஞ்சத்தின் தஞ்சம்
இருப்பவனுக்கு அவனைப்பற்றியே என்னம்
இல்லாதவனுக்கோ பலவிதமான என்னம்

விழாக்களும் வினாக்குறியாகும்
புத்தாடை பலமடிப்பிலாகும்
அதுவேதான் பலவருடத்தையும்
சொந்தம் கொண்டாடிருக்கும்

இப்புலுதியில் என்னிறத்தம்
கலந்துபோய் விட்டது
இனி என்னிலிருப்பது
வெரும் என்புக் கூடுகளே...

தேடலில் தொழைந்துபோகும் காலம்..
இதுதான் ஏழைகளின் கோலம்
என் ஏழ்மை வெள்ளிவிழா காண்கிறது
இன்று எனது வயதும் 75து ஆகிறது..

Thursday, February 23, 2012

ஈழக் கிழவனின் முணுகள்


வாணமிடும் கண்ணீரை
உள்ளே அழைக்கும்
சிறு ஓலைக்குடிசை

சின்னஞ்சிறு பருவம்
சினுங்களிடும் பசி
வரவு தேடி அப்பன்
அப்பன் வரவு காத்து தாய்

உலையில் இட்ட அரிசி
உப்புக்குச் சொந்தமில்லை
உறக்கப்பத்திய நெருப்பு
உண்ணும் பதத்தில் அன்னம்

உருட்டிப்பிடிச்ச சோறு
ஊட்டிவிட்ட கரங்கள்
கால் மடித்தொட்டில்
கலங்கமில்லா தாலாட்டு

விழி மூடிக்கொள்ள
அமைதிகாத்த இரவு
அரசன் வாழ்கைதான்
பிஞ்சு வயதனில்

கோன் வாழ்கை கோணிப்போய்
கூனி வாழும்போது
நிம்மதி தேடியழைகிறேன்

ஓலைக்குடிசையிலும்
நிலாச்சோற்றிலும்
கோடி இன்பங்கள்
கொட்டிக்கிடந்ததாய்
ஒருகாலம் இருந்தது.....

உயிர்க் காதல்



என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் சாஹறா
பெருக்கெடுத்து வருகிறது

நீயென் தோழ்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்

வேதம் நாங்கும் விளக்கவில்லை
உன்போன்ற காதலொன்றை
அதை நானிங்கு படிக்கிறேன்
உயிருள்ள வேதமொன்றில்

உலகோடு எல்லாமே அழிந்துவிடும்
உன்மீது நான் கொண்ட காதல்
அழியாத உயிர்க்காவியமாய்
மருலோகத்திலும் உயிர்வாழும்

Thursday, February 16, 2012

விடைகண்ட நிமிடங்கள்



நிலவொளியில் நிழலாட
தொட்டம் தொட்டமாய் இருலாடும்
இருலாடும் இடமெல்லாம்
நான் மறைந்தாடிச் செல்வேன்

எதிர்பார்த்த இரவுக்கிளி
நிலவோடு கதைபேசி
நலவின் ஆயுலை
நீடித்துக்கொண்டிருந்தாள்

ஒரு துண்டு இருட்டில்
அவளின் துணியாட
என் கண்விழிகள்
அதைக் கைது செய்தன

கலவரம் இல்லாமல்
அவளும் ஒத்துழைத்தாள்
கைதிட்ட நானோ
காரணம் தேடி நின்றேன்

மேகக் கூட்டத்தினுல்
புகுந்து ஒழிந்து கொள்ளும் நிலா
புதுப் புதுக்காரணங்களை
காட்டிச் சென்றது

பலமாய் வீசிய காற்று
புது வித உணர்வுகளை
தூண்டிச் சென்றது

இயற்கை என்னோடு
விளையாடிச் செல்ல
இருலோடு ஒட்டியிருந்தவளோ
என் தோழில் சாய்ந்து - என்
உலகமே நீதான் என்றால்

விலங்கிட்ட என் மனமோ
விடுதலையை
அறிவித்துச் சென்றது






அகத்தின் வலி



தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும்
எழுதப்படாமலேயே இருந்தது

அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை
உயில் எழுதிச் சென்றாய்

அதைப்படிக்க படிக்க
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது

சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொளிக்கிறது

“காதல்” காதல்தான் - அது
உனக்குப் புரிகிறதோ என்னவோ

இப்போதல்லாம் உன்னைப்பற்றி
கவிதை எழுத நினைக்கிறேன்
அப்போது உனது பெயரையே
பக்கம்பக்கமாய் எழுதிவிடுகிறேன்

உன்முகம் தந்த பரிசு
என் அகத்தில் வலிக்கிறது
அது சுகமாய் இருந்தாலும்
மனதை இருகக் கட்டி
கொலை செய்கிறது

சுடுமணலில்  துடிக்கும் புழுகூட
சுகங்கண்டு விடும்
உள்ளிருந்து பதறும் இதயம்
என்னவென்று சொல்வது

இருளோடு அழும் இதயம்
உதிக்காமலேயே
அஸ்த்தமனம் ஆகிடுமோ..?

Wednesday, February 15, 2012

இன்று காதல் பயணம்



இரு பூக்கொப்புகளோடு
இரு இதயங்களின்
பண்டமாற்றத்தில்
தொடங்கப்போகிறது
புதியவர்களின் காதல்
எதிர்எதிர் இதயங்கள்
உரசிக்கொண்டே காதல்
பத்திக்கொள்ளப்போகிறது
அதில் பூக்களும் பூக்கும்
புரியாத புதிர்களும் தோன்றும்
புதிதாய் உறவொன்றும் உதிக்கும்
இதயங்களின் வெற்றிடங்கள்
நிறப்பப்படும் இன்பநாள்
நிறப்பப்பட்ட இதயங்களின்
இன்பச்சுமையை
இறக்கிவைக்கும் இனியநாள்
திருமணத்துக்கு முன்
ஒத்திகையும் இன்றுதான்
தொடங்கப்போகிறது
இரு உயிரெனும் தண்டவாளத்தில்
ஒரே  இதயமாய் “காதல்” பயணித்து
அது முடிவடையுமிடம்  “திருமணம்”
பாதைகள் வளைவானவைகள்தான்
பயணிக்கும் நீங்களும்
வளைந்துதான் பயணிக்கவேண்டும்
பரிமாறிக்கொண்ட “பூக்கள்”
கருகிவிடும
ஆனால் “இதயங்கள்”
உயிர் வாழும்
காதலெனும் பயணத்தில்
பயணிக்கும் புதியவர்களே
உங்கள் பயணத்தைத் தொட
வாழ்துகிறேன் பூத்தூவுகிறேன்.

Thursday, February 2, 2012

இயற்கையோடு ஒரு பொழுது











கடல் நீரைக்கிழித்து
ஆதவன் எழும்போது
படபடவென சிறகுகளை விரித்து
கூடு கலைக்கும் பறவைகள்

தழும்புகின்ற கடல் நீரில்
வெளிக்கின்ற செவ்வாணம்
துடிக்கின்ற ஒரு அழகிய ஓவியம்

கறைகளை முத்தமிடுகின்ற
அலைகளென்றும் அந்த அலைகளை
வெல்லுகின்ற படகுகளென்றும்
அந்தப்படகுகளைப் படம்பிடிக்கும்
நீரலைகளென்றும் பரவசக்காட்சி
எங்கும் படர்ந்து கிடக்கும்

துருதுருவென தரதரவென்று
தறையை வாரிக்கொண்டு
மாயமாய் மறைந்து விடும் நண்டுகள்












ஆகாயத்தில் கூந்தலை விரித்து
ஒன்றோடு ஒன்று கதைபேசி
இனிக்கும் இசையாய்
காதுகளையும் குளிரவைக்கும்
தென்னையின் ஓலைகள்

கொஞ்சம் அப்படியே
மேற்கே திரும்புகிறேன்
பூமி பச்சிலையால் மூடப்பட்டு
அங்கேயும் அலையாய்
ஆடியசைந்து தவழ்கிறது...

சலசலவென ஓடும் நீரோடை
அதைப் பருகிக்கொள்ளும்
வேளாமைகள் - அதில்
தூங்கிய பனித்துளிகள்
என்னிதயத்தை நனைத்துவிடுகிறது










முட்டியால் தலைசெய்து
காய்ந்த வைக்கோலால்
உடல் அமைத்து
ஒட்டுத்துணியால் அலங்கரித்து
வயளை காத்து நிற்கும்
அழகான காட்டுபொம்மை

நான்கைந்து ஓலைகளால்
கூறையமைத்து
வலைந்து நெழிந்த கம்புகளால்
தூண்கள் அமைத்து
ஒற்றை விளக்குடன்
ஒலி வீசி்க்கொண்டிருக்கும்
அற்புதமான பரன்கள்

ஆங்காங்கே மலைப்பபூண்டுகள்
அதன் நடுவே மறைந்து செல்லும்
இறவின் எதிரி கதிரவனோடு
முகிலினங்களை விலக்கி
சந்திரனின் வருகை












அது வாணத்தின் முற்றுப்புள்ளி
அதைச் சுற்றி கமாப்புள்ளியாய்
தொடர்ந்து செல்லும் நச்சத்திரங்கள்

நிலவோடு போட்டிபோட்டு
முன்னும் பின்னுமாய்
படர்ந்து வரும்  மேகக்கூட்டங்கள்
என் இமைகளையும் மெதுவாய்
தடவிச்செல்ல மூடிய விழிகளோடு
நானும் உறங்கிப்போனேன்




Tuesday, January 31, 2012

மண்ணறை காணும் காதல்


மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனித்திருக்கிறாய்

அந்த மௌனமே
சுட்டெரிக்கும் றவையாய்
என் நெஞ்சை
துளைத்துச் செல்கிறது

சத்தமில்லாத
பாசை கூடவா
உன்னிடம்
ஊணமாகிவிட்டது..?

இப்போதுதான் புரிகிறது
நீ மௌனிப்பதே
என்னைக் கல்லறையில்
காண்பதற்கென்றே..

அப்படியே நான்
மண்ணறையானாலும்
மனம் என்னவோ
வெளியேதான் உள்ளது

அப்போதாவது
ஓரிரு வார்த்தைகளை
பேசி விட்டுச்செல்
சமாதியாவது
சாந்தியாகட்டும்

கொல்லும் பார்வை





பெண்னே நீ
எய்த பார்வையால்தான்
இங்கு பாதிப்பேர்
பரிதாபமாய்
விழுந்து கிடக்கின்றனர் என்றால்


அந்த நிலை
எனக்கு வேண்டாமென்று
நான் பார்வைகளற்றே
வாழ்ந்திட வேண்டுமென
விரும்புகிறேன்...

தொடராத வீணை



பூவையின்
கூந்தலை கோரிய
என் விரல்கள்
கோவை இதல்களையும்
கிள்ளிக்கொள்ள

புழுவாய்த் துடித்து
மெதுவாய் விழுந்தது
தறையில்

வீணையின் வடிவமாய்
தறையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசிக்க

வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதையத்தில் மேலதாளம்

ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன

சுதி நழுவாமல்
சுவை ஏரிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது

பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது

முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

Wednesday, January 25, 2012

வீதியில் தேவதை



கழைந்த கூந்தலை
காற்றோடு படரவிட்டு

கால் கொழுசின் ஓசையை
காற்றோடு தவழவிட்டு

சாலையில் - ஒரு
தேவதையின் வருகை

அதனால் சாலைநெடுகே
சங்கிலிப் போராட்டம்

அகிம்சையாய்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது

அவளோ
அமைதியாய் நடக்கிறாள்

என் உணர்வுகளையும்
உரசிச் செல்லும் - இவள்

எந்த ஊருத்தேரோ
என்னதான் பேரோ

கொல்லை கொள்ளும்
கொள்ளை அழகில்

என் இளமையிங்கு
கொழுந்து விட்டெரிகிறது

உயர்ந்த விழிகளோடு
பனியாத என்பார்வைகள்
இவள் செல்லுமிடமெல்லாம்
 தொடர்கிறது

பெண்னே - நீ
சீக்கிரமே மறைந்து விடு

சீறான நிலையிங்கு
நிகழட்டும்

Monday, January 23, 2012

பள்ளிக்கூடம்



நெஞ்சை வருடும்
பசுமையான நினைவுகள்
எம் பள்ளிக்கூடக் நாட்களே

அதில் பகிர்ந்து கொண்ட
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு கதை சொல்லும்

அரிவரியில்
கால்த்தடம் பதித்த
முதாலாவது கலைக்கூடம்
எம் பள்ளிக்கூடம்

அறியாமையை
அடியோடு கிள்ளியெரியும்
அன்பு ஆசான்கள்

பள்ளிப்பருவத்தில்
நட்பை பகிர்ந்து கொண்ட
பள்ளி நண்பர்கள்

பக்கத்து பக்கத்து மேசையில்
பாசத்தைப் பரிமாரிக்கொண்டே
பகிர்ந்து கொண்ட பாடங்கள்

யாருமே இல்லாத நேரம்
வகுப்பறையை இரண்டாக
புறட்டிப்போட்ட காலங்கள்

கூடி நின்று
அறட்டையடிக்க
நிழல்தரும் மரங்கள்

கொஞ்ச நேரத்துக்குள்
கொள்ளை ஆசையாய்
விளையாடி மகிழ்ந்த
விளையாட்டுக்கள்

யாரும் இல்லாத இடங்களில்
மனதுக்கு பிடித்தவளுடன்
நெஞ்சு படபடக்க
கதைத்து நின்ற நிமிடங்கள்

பரிட்சை நேரத்தில்
விழுந்து விழுந்து பாடங்களை
மீட்டிக்கொண்ட நாட்கள்

தேர்வின் முடிவுகளை
கையில் வாங்கி
உறைந்து போன நாட்கள்

பிரிவு என்பது
தவிர்க்க முடியாது என்பதை
உணர்த்திய விடுகை விழா

எல்லாம் நடந்து
எல்லோரும் பிரிந்து
எங்கங்கோ இருந்தாலும்

உள்ளம் பரவசத்தால்
பாய்ந்து பற்றிக்கொள்ளும்
பள்ளி நினைவுகள்
என்றுமே மாறாது மாறாது






Saturday, January 21, 2012

உறங்கிவிடும் உணர்வுகள்



உன்னைக் கண்டபின்
காலங்களை
நேசிக்களானேன்

சிறகுகளின்றி
விண்னைத்
தொட்டு வந்தேன்

நீ இல்லாதிருந்த
நிமிடங்களை
வெறுத்திருந்தேன்

உன்னோடிருந்த
நிமிடங்களை
ரசித்திருந்தேன்

ஒவ்வொரு வினாடியும்
ஒரு விழாக்கோலமாய்க்
கழிந்து கொண்டது

காதல் கனிய
மணப்பந்தல்
அலங்காரமிட்டது

ஓரிரு வருடங்கள்
ஓஹோன்னு சென்றது

விதி செய்த விளையாட்டு
கடல் கடந்து
தறையில் நீந்துகிறேன்

இளமையின் ஏக்கங்கள்
இலைமறை காயாய்
அழுகிவிடுகிறது

ஆசையும் அரவணைப்பும்
அருந்து விழும்
தொலை  நாடாவில்
பரிமாறப்படுகிறது

இளமையின் துடிப்புகளோடு
உறங்கிவிடும் உணர்வுகள்
எண்ணிலடங்காது

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாகிறது

ஓயாத அலையாய்
முறிந்து விழும்
இன்ப நினைவுகள்
எனதுணர்வுகளை
நனைத்து விடுகிறது

இரவோடு போரடி
அதன் மடியில் தலைசாய்த்து
விழிகளை மூடுவதற்குள்
காலைப்பொழுது
விழித்துக்கொள்கிறது

நாட்களோடு போராட்டம்
நகராத நிமிடங்களென்று
நரகமாகிறது வாழ்கை...


Tuesday, January 10, 2012

தீண்டல்கள் இல்லாத தித்திப்புகள்



தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடர்ந்து விடும்

இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசும்

நீங்காமலும் தீண்டாமலும்
தீட்டப்படும் முணுகள்
தேனாய் ருசிக்கும்

தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்கும்

முதுமை குண்றாத பருவம்.
மூச்சுக்காற்று
சூடேறிப்போகும்

உதடுகள் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடும்

நெட்டன நிமிர்ந்த ரோமம்
சட்டன சிலிர்க்க ஆரம்பிக்ககும்

ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லும்

தெவிட்டாத மெட்டாய்
உள்ளமதை
பாடிக்கொண்டிருக்கும்

ஈருயிருகளுக்குமிடைய
ஈர்ப்புகள் அருந்துவிழ...

கூடல்கள் இல்லாமல்
இன்பங்கள் இறக்க...

ஊஞ்சலின் இரு கைறாய்
உணர்வுகள் அங்குமிங்கும்
அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்




Monday, January 9, 2012

சொல்லாத காதல்



சிறு குழந்தையாய்
இதயம் அழுகிறது

இதயம் இரட்டிப்பாகி
உள்ளம் கனக்கிறது

காதலை மொழிய
உதடுகள் ஒட்டுகிறது

வெளிப்பட்ட வார்த்தைகள்
விலகிச் செல்கிறது

வேதனையாலேயே
இரவுபகல் கழிகிறது

சொல்லாமல் சுகங்கண்டே
கொல்லாமல் கொல்கிறது

மொத்தத்தில்
முள்ளில் சிக்கிய
சீலை போல..

உயிரும் உள்ளமும்
துடித்துக்கொண்டே
சுகமாய் வாழ்கிறது...

Monday, January 2, 2012

புதிதாய் பூத்திடு


வண்டு வந்து
அமர்ந்ததாலா

உன் இதழ்கள்
உதிர்ந்து போயின..

இந்தப் பூ விழியில் யார்
நீர்க்கோலம் போட்டது..

விழிகளதை தாங்கிடுமோ
வலிகழைந்து துளிகளாக்கிவிடு

விதி யாரை விட்டது
துயர் மறந்து தூங்கு..

தேனி உனை ருசித்ததாலா
நீ சிதைந்து போனாய்..

பூவே உன்
இதழ்கள் உதிர்ந்தாலும்..

இழந்தளிர்களென்னவோ
ஆராதிக்கவே செய்கிறது..

நீ மலர்ந்த
தடம் மறந்து
..
புதிதாய் பூத்திடு
மீண்டும்..

அன்புடன் பாயிஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...