Thursday, February 2, 2012

இயற்கையோடு ஒரு பொழுது











கடல் நீரைக்கிழித்து
ஆதவன் எழும்போது
படபடவென சிறகுகளை விரித்து
கூடு கலைக்கும் பறவைகள்

தழும்புகின்ற கடல் நீரில்
வெளிக்கின்ற செவ்வாணம்
துடிக்கின்ற ஒரு அழகிய ஓவியம்

கறைகளை முத்தமிடுகின்ற
அலைகளென்றும் அந்த அலைகளை
வெல்லுகின்ற படகுகளென்றும்
அந்தப்படகுகளைப் படம்பிடிக்கும்
நீரலைகளென்றும் பரவசக்காட்சி
எங்கும் படர்ந்து கிடக்கும்

துருதுருவென தரதரவென்று
தறையை வாரிக்கொண்டு
மாயமாய் மறைந்து விடும் நண்டுகள்












ஆகாயத்தில் கூந்தலை விரித்து
ஒன்றோடு ஒன்று கதைபேசி
இனிக்கும் இசையாய்
காதுகளையும் குளிரவைக்கும்
தென்னையின் ஓலைகள்

கொஞ்சம் அப்படியே
மேற்கே திரும்புகிறேன்
பூமி பச்சிலையால் மூடப்பட்டு
அங்கேயும் அலையாய்
ஆடியசைந்து தவழ்கிறது...

சலசலவென ஓடும் நீரோடை
அதைப் பருகிக்கொள்ளும்
வேளாமைகள் - அதில்
தூங்கிய பனித்துளிகள்
என்னிதயத்தை நனைத்துவிடுகிறது










முட்டியால் தலைசெய்து
காய்ந்த வைக்கோலால்
உடல் அமைத்து
ஒட்டுத்துணியால் அலங்கரித்து
வயளை காத்து நிற்கும்
அழகான காட்டுபொம்மை

நான்கைந்து ஓலைகளால்
கூறையமைத்து
வலைந்து நெழிந்த கம்புகளால்
தூண்கள் அமைத்து
ஒற்றை விளக்குடன்
ஒலி வீசி்க்கொண்டிருக்கும்
அற்புதமான பரன்கள்

ஆங்காங்கே மலைப்பபூண்டுகள்
அதன் நடுவே மறைந்து செல்லும்
இறவின் எதிரி கதிரவனோடு
முகிலினங்களை விலக்கி
சந்திரனின் வருகை












அது வாணத்தின் முற்றுப்புள்ளி
அதைச் சுற்றி கமாப்புள்ளியாய்
தொடர்ந்து செல்லும் நச்சத்திரங்கள்

நிலவோடு போட்டிபோட்டு
முன்னும் பின்னுமாய்
படர்ந்து வரும்  மேகக்கூட்டங்கள்
என் இமைகளையும் மெதுவாய்
தடவிச்செல்ல மூடிய விழிகளோடு
நானும் உறங்கிப்போனேன்




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...