Wednesday, December 17, 2014

எங்கே எவ்விதம் முடியும்...?












இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்

பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?

சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?

முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?

தலைவா உம்பயணத்தின் எல்லை
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?

பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்

பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே
நிஜமென்று நம்புகிறோம்

Saturday, December 13, 2014

மரணம்



















மரணம் உன்னை அழைத்திடும்
தூரத்திலேதான் உள்ளது - அதை
மரணப் படுக்கையிலும்
மறந்திடாதே மனிதா

அதனைக் குறித்த திகதி
அவன் கைவசமிருக்கிறது

கருத்துவேறுபாடுள்ள விடையத்தில்
தலையை நுழைத்துக்கொண்டு
கைகலப்பும் ஆகிவிடுகிறார்கள்
அதை மறந்து விட்டு

அந்த நாளை மறந்தே விட்டயா..?
உலக ஆசையும் களியாட்டமும்
உன்னை ஈர்த்துக்கொண்டதா..?

நாட்டுநடப்புகளாலையே
மண்டையில் நறை விழுகிறது
இரத்தக்களரிகள்
இதயத்தை சூழ்கிறது

இன்நிமிடம் என்னவாகுமோ..?
உன்கதைகேப்பார் யாரோ..?
இனிய பொழுதுகள் இறந்துபோகுமே..!
இனி என்ன செய்யப்போகிறாய்..?

நீ வாழ்ந்த வாழ்கை எங்கே..?
நீ சம்பாதித்தவைகள் எங்கே..?

நீ கோனாய் இருந்தபோது
உன்முன் கூனி நின்றவன்கூட
நீ கட்டையாய் கிடக்கும்போது
நெஞ்சை விரித்துக்கேட்பான்
ஏனின்னும் தூக்கவில்லையென்று

பொருளிலும் பொன்னிலும்
வெறுப்புகள் வரும்முன்னே
கடந்த வாழ்க்கையை நினைத்துப்பார்
மீதியுள்ள வாழ்கையை சிந்தித்துப்பார்

உன்னைப்படுக்க வைத்து
நாளுபேர் தொழும்நாள் வரும்முன்
உனக்காய்த் தொழுதுகொள்..!

நாளைய நாட்கள்
உனக்காய் காத்திருக்கிறது..!
அது சுட்டெரிக்கும் நெருப்பா..?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா..?

அதன் அடித்தளத்தின் நெருப்பு புதிது
உலகை கருகிடச்செய்யும் வல்லமையதற்கு
நிஜங்களை உன்முன் நிறுத்தி
போலிகளைக் களைந்தெரிந்துவிடு

நீ அந்த நாளை அடையும்போது
நிச்சியமாய் கதறியழுவாய் - அப்போது
உன் கண்ணீர்த்துளிளென்ன
அவைகளை அனைத்துவிடுமா..?

மரணத்துக்காய் உன் தசைகள்
ரணமாய்த் துடிக்கும்முன்
ஒரு முறை நன்றாய் அழுதுவிடு..

Saturday, November 29, 2014

ஏழ்மை















கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....



















Thursday, November 27, 2014

ஆட்சிமாற்றம்












அரச இயந்திரங்கள்
அரசியல் வாதிகள் 
அமர இடம் கிடைத்தால் 
அறுத்து விடுவார்கள்

அவர்களுக்கான உலகமிது
நீதியும் நேர்மையும்
தராசுகளில் மேலேறி நின்று 
கேலியாய் சிரிக்கிறது 

ஏமாற்றுபவனும்,ஏமாறுபவனுமாய் 
இருவர் வாழும் உலகமிது
பழகிக்கொள்ளக் கூடாதவொன்றாய் 
ஏமாற்றம் என்றும் உண்டு!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது 
அதிகாரம் மட்டும் ஜெயிக்கும்
அதிகாரம் உள்ள இடத்தில் 
சமாதானம் மிரண்டு ஓடும்!

புரட்சிக்காய் புறப்பட்ட
மூன்றாம் நிலை மனிதனே!
நெஞ்சின் உரத்தினால்
ஆயுதங்களைக் களைந்தவன்

புரட்சியின் சீற்றமே
ஆட்சியொன்றின் மாற்றம்.. முடிவாய்
வெற்றி, தோல்வி 
இரண்டில் ஒன்றே எஞ்சி நிற்கும் 

பயம் வெறுப்பின் அடித்தளம் 
பாய்ந்தால் பாதாளமே சுருங்கும்
புரட்சிக்காரனின் போராட்டம் 
தனக்கானதல்ல.. தன் சந்ததிக்காய்

என்றுணர்ந்து எமக்கென 
வீறிட்டெழ எம்மில் யாருண்டாம்..?
விடிந்தால் இன்னுமொரு மாற்றம் வரும்!
விடைதேடுங்கள் அதற்குள்..!

Tuesday, November 25, 2014

உனக்காய் காத்திருக்கிறேன்...












மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!

காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்

வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு

நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?

இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...

என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..

வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே

கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…


Monday, November 24, 2014

தொடுகை இல்லாது போனால்....
















ஒரு தினத்தில் ஓரிடத்தில்
பிந்திய பாதிப்பொழுதது
அவனும் அவளும்தான் 

தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடங்களாயின
இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசளாயின

நீங்காமலும் தீண்டாமலும்
முனகள்கள் தீட்டப்பட்டு
தேனாய் ருசிக்களாயின
தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்களாயின

முதுமை குன்றாத பருவம்..
மூச்சுக்காற்றின்னூடாய்
தேகம் சூடேறிப்போக
உதடுகளும் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடின

நிமிர்ந்த ரோமங்கள்
சிலிர்க்க ஆரம்பித்தன
ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லின

உள்ளத்தில் பலவித ராகங்கள்
விரல்களில் வீணையின் பாகங்கள்
ஸ்ருதி தாளம் சேராத பாடல்
அரங்கேற்றம் ஆயின

ஈருயிர்களுக்குமிடையில்
ஈர்ப்புகள் அறுந்துவிழ...
கூடல்கள் இல்லாதுபோயின
இன்பங்கள் இறந்துபோயின

உணர்வலைகளோ  ஊஞ்சலின் 
இரு கயிறாய் அங்குமிங்கும்
அலைந்து கொண்யேயிருக்களாயின்...

முகப்புத்தகம்..!






















முகம் தெரியா நட்பின்
முகவரி தேடும் பயணமிது
அகம் தெரிந்து கொள்ள 
தொடங்கும் பயணமல்ல...

வெறும் சித்திரத்திலும் 
சில நிமிடப்பேச்சிலும் 
சிகரம் தொட நினைப்பது
சிந்தனைக்குரியதல்லவே..

வயதில் பாதி குறைத்துவிட்டு
வசனம் பேசியழைகிறார்கள்
வாழ்வொன்றிருப்பதை மறந்து
வழிதவறிப்போகிறார்கள்

நீங்கள் சாதிக்க உள்ளவைகள்
சாய்ந்து தூங்குகின்றது
நீங்களோ தூங்காமல்
சாய்ந்துகொண்டே போகிரீர்கள்

சூழவுள்ள நண்பர்களை மறந்து
முகம் தெரியா நட்புக்காய் 
கடல்கடந்த தூரம்வரை
பயணித்து வருகிறார்கள்

இப்பாரின் ஒவ்வொரு தெருக்களிலும்
ஒரு பொய்யான விலாசத்துக்காய்
பொருங்கோடி மக்களின்று 
பேய்களாய் அலைகிறார்கள்

பார்போற்றும் மதங்களுக்குள் 
கனிவாய் வாழ்ந்தவர்களின் 
கற்பைப்போன்ற மானங்கள்
காற்றில் போன திசைகளெங்கே..?

சிறு சிறு சபலங்களுக்காய்
சம்பிரதாயங்கள் சாகுறது 
சத்தியமொன்று மட்டுமே
சமாதிவரை பயணிக்கும்

உண்மை நட்புக்காய்
தோள் கொடுக்கும் தூரம்பார்க்காதீர்
தூக்கத்தில் இருந்தாலும் கூட
போர்வையைக் கழட்டியெழுங்கள்

துணையிருக்க யாருமின்றி..!














ஒரு ஏழையின் முனகல்கள் எனது
எழுத்துக்களில் பின்தெடர்கிறது-இது
ஏட்டில் ஆனவையல்லவே...

வாழ்க்கையின் வடிவங்களை
நிறங்களில்தான் காணமுடிகிறது
நிஜத்தில் காணமுடிவதில்லை

இங்கு வறுமையின் நிறங்களோ
போத்தல்களில் அடைக்கப்பட்டு
விலைகளுக்கு பேரம் பேசப்படுகிறது

தேவைகளை வறுமை மட்டும்
கைதுசெய்து வைத்துக்கொண்டு
வாழ்க்கையோடு விளையாடுகிறது

வட்டமிடப்பட்ட கோட்டிற்குள்
கட்டுப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை 
கட்டவிழ்ந்து வெளியேறி நிற்கிறது 

தேகம் இரவுக்குள் ஒழிந்தது - அதில்
உடல் மட்டும் உழைத்துக்கொண்டது
ஊதியம் கை நிரம்பக்கிடைத்தது

இப்போது இந்த வாழ்கையிலும்
கருப்பு நிறம் மட்டும்தான்
வெளிச்சத்தைக் காட்டுகிறது

இரக்கமற்ற ஒவ்வொரு இரவுகளும்
ரணங்களோடுதான் விழித்துக்கொண்டது
இதுதான் காலம் பூசிய வர்ணங்கள்

உயிரை விழுங்கிக்கொண்ட ஓரிரவு
அப்படியே உறங்கிப் போனது 
துணையிருக்க யாருமின்றி..!

யார் ஏழை..?












துண்டு துண்டுகளாய்
ஒட்டுப்போட்ட பாவாடைக்காரி
தலையில் கனத்தோடு
வாயில் முணுமுணுப்போடு 
வயல் மண் மிதித்து நடந்தாள்!


இருப்பவர்களோ அவைகளை
மறைத்து வைத்து ஏழைகளாகவே
மரணித்து போகிறார்களே
நானும் அவர்கள் வீட்டுக்கு
அருகாமையில்தான் வசிக்கிறேன்
என்பதை மறந்து விட்டு...!

Tuesday, April 22, 2014

காய்ந்த றோஜாக்கள்

நீ திட்டிவிட்டுப் போகும்போது
நான் எட்டி நின்று பார்ப்பதனால்
சிகரத்தையே தொடுகிறேன்
சிறைபிடிக்க யாருமில்லை

நெஞ்சத்தின் உச்சத்தில்
நீ அமர்ந்திருக்கிறாய் - ஆனால்
உள்ளம் ஏனோ
அழுதுகொண்டுதானிருக்கிறது

உருண்டு புரள்வதிலையே
உறக்கம்
விடியலை அடைந்துவிடுகிறது

படித்த பாடங்கள் 
மறந்து போகிறது
பாடப்புத்தகங்கள்
மூடியே இருக்கிறது

அழகான வார்த்தைகள்
ஒழிந்து கொள்கிறது
அகராதியில் பாதிப்பக்கங்கள்
கிழிந்து போகிறது

உன்னிடம்  நீட்டிய
ஒற்றை றோஜாவோ
இராமாயண புத்தகத்தில்
காவியமாய் காய்ந்துகிடக்கிறது

மெல்லிய குரலில்
வேதனையின் ரணங்கள்
மெல்லிசை அமைக்கிறது

சுடு காட்டின் ஓசை
இசையாய் இனிக்கிறது
இறந்து போயிடவே
மனம் துடிக்கிறது

இறப்புக்குப் பின்னாலும்
காலம் முழுவதும் 
பாடிக் கொண்டேயிருக்கும்
காதலின் அழகிய நினைவுகளை.

Thursday, April 10, 2014

அண்னை ஓர் அதிசயம்


கருவறைக் காவியம்
காலம் முழுதும் எழுதும்
இவள் அதிசயம்

காலச் சுவடுகளில்
ஆதியும் அந்தமுமாய் - அவள்
நாமமே அறையப்பட்டிருக்கும்

அதிசயம் ஆனால் உண்மை
ஆண்டாண்டு காலம் அழைகிறார்கள்
இவள் மடிபோன்ற மெத்தையொன்றை
கண்டு கொள்ளலாமென்று

விஞ்ஞான உலகத்தில்
மெய்ஞானம் கண்ட உண்மை
மாதாவை மிஞ்சவொரு
ஆத்மாவும் இல்லையென்று

வேதங்கள் நாங்கும்
பெருமை கொள்கிறது - உன்
பேரன்பை பொழிவதனால்

அவளின் உயிராய்
நினைக்கும் எம்மை
என்றுமே எம் உயிராய்
மதிப்போம் எம் தாயை

Sunday, April 6, 2014

விலைபோன இரவுகள்















ஒவ்வொரு இரவுகளும்
வெவ்வேறு போர்வைகளுக்குள்
ஒழிந்துதான் கொள்கிறது

ஒவ்வொரு விடியலும்
சுமைகளத் சுமந்துதான்
உதயமாகிக் கொள்கிறது

காலத்தின் தேவையால்

உடலோ ரணங்களை
சுமக்கத்தான் செய்கிறது

இரக்கமற்ற இரவுகளோ
 தனிமைப்படுத்தியதுமில்லை
இரங்காத மனங்களோ - இறுகத் 
தழுவிக்கொள்ள மறுத்ததுமில்லை

இனி அவளின் கல்லறையில்
இரவுகளுமில்லை விடியலுமில்லை
இன்றிலிருந்துதான் இவள்
தனியாக உறங்கப்போகிறாள்

Monday, March 24, 2014

குடும்பம்


காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்

கூடல்கள் இல்லையென்றால்
குடும்பங்கள் குலைந்து
கலைந்து போய்விடுமோ 

இதில் 
ஊடலில் கண்ட உறவுகளை 
என்னவென்று சொல்வதுவோ

தாய் தந்தையரைத் தொட்ட
சாதி சனங்கள் கூட - இன்று
சிதரிப்போய்க் கிடக்கிறது

உறவுகளில் 
குருதி ஓட்டத்தையேனும்
காணவில்லையே - இதில்
பாதைகளை எங்கே  தேடுவது

“குடும்பம்” 
ஒரு கோயிலென்றார்கள்.!
அது கோடி மையில் தூரம்
ஆனதேனோ...?


Thursday, March 20, 2014

ஒரு தலை றாகம்




ஒற்றையடிப் பாதையில்
ஒரு துரவியாய்
தணிப்பயணம் தொடர்கிறது

நாங்கு திசைகளிலும்
இருட்டடைப்பு - இதில்
இரவென்ன, பகலென்ன

வழிகள் தவரிப்போகும்
உள்ளத்தில் அச்சமெலும்
உயிரில் வலிகளதிகரிக்கும்

தலை சுற்றி 
நிலத்தை முத்தமிடுவாய்
நிமிர்ந்தெழ நாதியொன்றை
நாடி நிற்பாய்

தூரத்து இன்பங்களை
துன்பம் ஒன்றே
துணையாகித் துரத்தும்

சாதிக்க நினைத்தவைகளை
சமாதிகளாக்கி விட்டு
சாவின் விழிம்பில் நின்றிருப்பாய்

ஒரு போதும்
சரித்திரம் எழுதப்பபேவதில்லை
“நீ”
ஒரு தலை றாகமென்று

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...