Saturday, March 10, 2012

காதல் புத்தகம்



ஒரு புத்தகத்தின்
தலைப்பு இது
காதலும் மரணமும்
முகவுரை..!

காதல் மரணத்தின்
விலாசமென்றும்
மரணம் காதலின்
விலாசமென்றுமிருந்தேன்

நான் மரணம் வென்ற
காதல் மாணவன்
இதையெழுதும்
இப்பேனாமுனை...
என் உயிர்த்துணை
எனக்கழித்த
காதலின் வெற்றி முனை...

உயிர்களால்
எழுதப்படும் காதல்
மரணத்தைக்
கடந்த பக்கங்கள்....
வெறும் அழகுக்காய்
எழுதப்படும் காதல்
அசிங்கத்தை
அரங்கேற்றிய பக்கங்கள்....

இருவர் சேர்ந்தெழுதும்
பக்கங்களில்
பூக்கள் கொட்டிக்கிடக்கும்....
ஒருவர் எழுதும்
பக்கங்களில்
முட்கள் நிறைந்து கிடக்கும்....

இருபக்கங்கள் இணையும்போது
படிக்கும் நேரம் நீண்டுசெல்லும்...
ஒருபக்கத்தை
படிக்க நேரம் சுருங்கிவிடும்....

இப்படியான பக்கங்களை
எழுதியவர்கள் ஏராளம்
விலாசம் காதல் ஒன்றே..

மொத்தத்தில்
“காதல்” மரணத்தின்
தொடக்கவுரை....
“மரணம்” காதலின்
முடிவுரை......

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...