Saturday, March 10, 2012

ஏழையின் வெள்ளி விழா...



என் சிந்தனைகள்
என்மீது போர்தொடுத்து
என்னை விலக்கி விட்டு
எங்கங்கோ செல்கிறது..

எத்தனையோ கோட்டைக்கு
நான் சொந்தக்காரன்
அத்தனையையும் என் உள்ளம்
வடிவமைத்து கட்டியதே...

பலகோட்டைக்கு அதிபதி நான்
பணை ஓலைதான் என்விரிப்பு
பசியென்று வரும்போது கூட
பானையும் வற்றிப்போய் கிடக்கும்

என்னத்தில் கோடிகளின் வண்ணம்
உள்ளத்திளோ பஞ்சத்தின் தஞ்சம்
இருப்பவனுக்கு அவனைப்பற்றியே என்னம்
இல்லாதவனுக்கோ பலவிதமான என்னம்

விழாக்களும் வினாக்குறியாகும்
புத்தாடை பலமடிப்பிலாகும்
அதுவேதான் பலவருடத்தையும்
சொந்தம் கொண்டாடிருக்கும்

இப்புலுதியில் என்னிறத்தம்
கலந்துபோய் விட்டது
இனி என்னிலிருப்பது
வெரும் என்புக் கூடுகளே...

தேடலில் தொழைந்துபோகும் காலம்..
இதுதான் ஏழைகளின் கோலம்
என் ஏழ்மை வெள்ளிவிழா காண்கிறது
இன்று எனது வயதும் 75து ஆகிறது..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...