Saturday, May 5, 2012

புலன்களையாழுகின்ற காதல்


புலன் விசாரணையொன்றை
நான் நடத்துகிறேன்
என் புலன்களை ஆழுகின்ற
ஒரு பூவொன்று பிறந்ததென்று..
கண்டெடுத்த பின் என்கனவிலும்
மணம் வீசுகின்றாய் பெண்ணே...
கனவிலும் நான் கவிஞனானேன்
உன்னை தேவதையாய் கண்டபோது..
உன்தோள் புயங்களில் விழுந்து
தழம்புகின்ற உன் கூந்தலுக்குள்ளே..
ஒழிந்து கொள்ளும் உன் நிலாமுகம்
என்நெஞ்சனிலே பவனி வருகிறது..
உன்னுடனேயே பயணிக்கும்
உன்னைப்பற்றிய எனது நினைவுகள்
வழி தடுமாறித் தவிக்கிறது..
தாமரை இலையில் நடனமாடும்
தண்ணீரில் துளிகளைப் போல்
என் சிந்தையில் நடனமாடும்
உன் நினைவுத் துளிகள் - என்
காதல் தாகத்தை தீர்த்திடுமோ...?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...