Friday, January 2, 2015

உயிராய் வாழும் நினைவுகள்














இமைக்கின்ற விழிகளுக்குள்
நீ வீசிச்சென்ற பார்வைகள்
துடிக்கின்ற என்னிதயத்தில்
உயிராய்த்தான் வாழ்கின்றது..!

கோகினூர் வைரமாய்
ஜொலிக்கின்ற உன் நினைவுகள்
நிலாச்சுடராய் பிரசவித்து
என்தேகமெங்கும் படர்கிறது..!

நான் ஈன்றெடுக்கின்ற
உன்னுடனான ஞாபகங்கள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்கின்றன..!

கதறியழும் என் உணர்வுகளை
தூர நின்று வேடிக்கைபார்க்கும்
உன்னுடனான நினைவுச்சிற்பம்
என்கண்ணீரைத் துடைத்துவிடுமா..?

Thursday, January 1, 2015

தலைவரின் பாதையில் தலைவன்..!











தலைவனே..
மர்ஹூம் அஷ்ரபே..
நீங்கள் எங்களை விட்டும் 
மரணித்திருக்கலாம் 

ஆனால் எமதுள்ளத்தில்
ஒழிந்திருந்து வேராய் 
வளர்ந்து செல்கிறீர்கள்..

நீங்கள் கடந்து வந்தபாதைகள்
எவ்வளவு கரடுமுரடு என்று
இப்போது உணரமுடிகிறது..

இன்று அப்பாதையில் 
எங்களுக்காய் ஒருதலைவர்
இரவு பகலாய் துரத்தப்படுகிறார்..

திரும்பும் திசையெல்லாம்
எரிகற்களால் வீசுகிறார்கள்
எப்படித் தாங்கிக்கொள்வார்.. 

நாங்கு சுவர்களுக்குள் 
ரகசிய அரசியலைச்சொன்னால்
அங்கேயும் முட்டிக்காலிட்டு 
விழுந்திடவும் மாட்டார்...

சரியான நேரத்தில் 
சரியான முடிவை எடுக்க
சரியான தலைவன் அவரே 

பலமுறைகள் 
பல உயர்பதவிகளைத் துறந்து 
பலமான ஆசனத்தை - எம்
உள்ளத்தில் நட்டிவிட்டார் ..

பேரினவாதிகளின் 
கடும்போக்கைக் கண்டு
கடுகளவும் கலங்காதவரே..

நீங்கள் கவனமாய்த்தான் 
பயணிக்கிறீர்கள் என்பது
எங்களுக்குப்புரிந்து விட்டது... 

மனமாசும் நயவஞ்சகமும்
உங்களைச் சூழ்ந்துகொண்டே
அனிவகுத்துத் துரத்துகிறது..

பல விசஜந்துக்களின் கூடாய்
இன்றைய அரசியல்களமிருக்கிறது
பத்திரமாய் நுழைந்துகொள்ளுங்கள்... 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...