Thursday, September 29, 2011

என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்

என்னோடு வந்த நாட்கள்
என்னைக்கடந்து விட்டது
காணவே முடியாத தூரத்தில்

அந்த வழிப்பாதையில் - நான்
பெற்றுக்கொண்ட அனுபவம்
இன்று வரை மனதோடு வாழ்கிறது

காலம் தந்த அருமையான நினைவுகள்
நெஞசை விட்டும் மாறுமுன்னே
அழகான அந்த நாட்கள் - என்
மனதை இன்னும் உரசுதே....

நான் கடந்து வந்த பாதையில்
அகலாத சில நாட்கள்
இன்னும் மனதோடு நிற்கிறது

கனவுகளோடும் ஆசைகளோடும்
உல்லாசமாய்ப் பறந்த நாட்கள்
பலனுகள் ஏதுமின்றியே கழிந்தன

வறுமையின் பிடியில் சிக்கி
வாழ வழியின்றி
வதைந்து போன சில நாட்கள்

கையில் உரமின்றி
ஊதியம் தேடியலைந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது

காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட

உறவுகளுக்காய் உழைத்து
சுமத்தப்பட்ட சுமைகள்
சுகமாக இறக்கப்பட்டு சுகன்கண்ட நாட்கள்

இங்கும் காலம் மாறவில்லை
சுழற்சி வாழ்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது

அலாரத்தின் சத்தம்கேட்டு
எரிச்சலோடு கழிந்து கொண்டிருக்கிறது
எண்ணிக்கையில்லாத இந்த நாட்கள்

ஒரு விடியலை நோக்கிய
ஒளிமயமான காலத்தை - என்
கால்கள் தேடி நடக்கின்றன
காலம் வழி திறந்தால் - என்
கால்கள் நுழைந்து கொள்ளும் ஒரு பொழுதில்

இடையே சில நாட்களுக்கான விடுமுறையில்
கடலலைபோன்ற என்னங்களோடு
பறந்து சென்றேன் - என்
பாச நண்பர்களையும் உறவுககையும் காண

அங்கே எல்லாமே என்னைவிட்டும்
ஒரு தூரத்து முற்றுப்புள்ளியானதை
என் மனம் தாங்க மறுத்த காலம்
இன்னும் உள்ளத்தடியில் வேரூண்டிருக்கிறது

என்னைக்கடந்து சென்ற காலம்
என்னை மீட்கவருமா என்ற
ஏக்கங்களோடு நாட்களை நான்
எண்ணிக்கொண்டே இருப்பேன்...

அன்புடன் பாயிஸ்

Friday, September 23, 2011

எம் வாழ்கை



முழுத் தூக்கம்
முழுமை பெற்று
பல வருடங்களாகின்றன
கடமையழைக்க
களைந்த தூக்கம்

கனவுகள் பல இருந்தும் - அதை
காற்றோடு கரைத்து விட்டு
காலத்தின் முகவரியை
தேடியலைகிறோம்
இப்பாலைவனத்தில்

வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்

வாரத்தில் ஒரு நாள்
சிந்திய கண்ணீரை
சொந்த சுமையாக்கி
துன்பம் மறைத்து
உரையாடுவோம் உறவுகளோடு

எம் இதயம்
அழுவது யாருக்கு கேட்கும்

வேண்டாத வாழ்கையை
விலை கொடுத்து
வேண்டித்தான் வந்திருக்கிறோம்
விதி செய்த விளையாட்டிதுவோ...?

ஆறு தசாப்த வாழ்கையை
அரைகுறையாய் வாழ்ந்தென்ன பயன்

சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா

இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை

ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்


Thursday, September 15, 2011

பதுங்கும் வரையில்தான் பூனை

அரக்கன் ஓருவன்
அரசனானான் அவனின்
ஆளுகைக்குள் ஆண்டிகளானோம்
அப்பாவிகளான நாங்கள்


அடக்குமுறையாணவத்தால்
வஞ்சக நெஞ்சமிட்டு எங்களை
வதைக்கும் இந்த சீடர்களின்
மனிதமேயற்ற அக்கிரமச்செயல்
அழியும் நாள் தொலைவிலில்லை

இங்கே மனிதர்கள் விறகுகளாக
வெந்து வெம்பிக்கொண்டிருக்கின்றனர்
அணுவளவும் அக்கறையில்லாத
அயோக்கியவான்கள் கைதட்டி
உள்ளம் குளிர்கின்றனர்

நாங்கள் குறைவானவர்கள்தான்
குணம் குன்றாத நல்லவர்கள்
நீங்களோ அதிகபட்சம்தான்
குணமேயில்லாத சூனியக்காரர்கள்

ஓலைக்குடிசை தான் நாங்கள்
மாடமாளிகை நீங்கள்
போட்டிபோட நாங்கள் நாதியற்றவர்கள்தான்
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்களை நீங்கள் எரித்தாலும்
நாங்கள் கருகிடுவதாய் இல்லை
போதும் எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பொறுமைகள்
பூட்டப்பட்டவரையிலும்
பாக்கியவான்களே நீங்கள்

அநியாயம் அத்துமீறும் போது
அங்கவீனர்களும்
ஆவசமாய் எழுவர்

அப்போது கைதட்டி
நாங்களும் உள்ளம் குளிர்வோம்
சிதைந்து போன உங்கள்
சடலங்களைப்பார்த்து

இவைகள் வேண்டாமென்றால்
எங்களை விட்டுவிடுங்கள்
நாங்கள் விலகியே இருக்கிறோம்

அன்புடன் பாயிஸ்

Tuesday, September 13, 2011

முழுமதியாய் முகம்மது நபி (ஸல்)

தாய் தந்தையிழந்து
தாத்தாவின் வளர்ப்பில்
மக்கத்துபுழுதியில்
மாமனிதம்மொன்று புலர்ந்தது
இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்

மந்தைகள் மேய்த்தாலும்
“மதி” தெழிந்த தண்ணீரைவிட
தெளிவான போக்கிலிருந்தது

உண்மையின் உறைவிடம்
முன்னாங்கே வயதேயுடைய
முஹம்மதிடம்தானிருக்கிறது என்று
எதிரிகளாலேயே
முத்திரையிடப்பட்ட முகவரியாளர்

சிலை வணக்கத்திலையே
சிந்தனையை இட்டு சிலைக்கு
சிரந்தாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில்
உண்மையை உரைக்க
உலகஏகனால் அங்கீகாரம் பெற்ற
வழிகாட்டியானார் எம்பெருமானார்

உண்மையை உரைத்த போது
சோதனைகளும் வேதனைகளும்
உதையடிகளும்தான் மிஞ்சியிருந்தன
மனம்சலிக்கவுமில்லை
உடல் சோர்ந்து போகவுமில்லை
சாதனைகளே பிரதிபலிப்பானது


எதிரிகளின் படைப்பலமும், ஆயுதப்பலமும்
அண்னலாரின்
நெஞ்சுரமிக்க மனபலத்திற்க்கு முன்
நொறுங்கிப்போயின

தியாகங்கள் வெண்று
உண்மையின் சாம்ராஜ்ஜியம்
உதயம் கண்டு அதன் ஒலி
உலகமெங்கும் பரவியது

இன்று அதன் ஒலி
விண்வெளியிலும் தெரிகிறது
உண்மைக்கு அழிவில்லையென்பதற்கு
உகந்த உதாரணம் இதுவே

பொய்மை அழிக்கப்படுவது நியதிதான்
உண்மை உதயமானதிலிருந்து
இன்னும் விருட்சமாகிக்கொண்டே செல்கிறது
1400 வருடங்களையும் தாண்டி

தியாகத்தால் சிந்திய இரத்தங்கள்
காய்து போயிருக்கலாம்
நீங்கள் வளர்த்த சகோதரத்துவம்
இன்னும் ஈரமாகவேயிருக்கிறது

சாந்தி, சகோதரத்துவத்தை
சாமத்தியமாக சாதித்து எம்
சந்ததிக்கு சமர்ப்பணம் செய்த சாதனை இன்னும்
சாண்று பயிண்றுகொண்டேயிருக்கிறது

சத்தியம் அசத்தியம்
எதுவென்று நாங்கள் அறிய
நீங்கள் இழந்து பெற்றுத்தந்தவை இன்னும்
சத்தியமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
சத்தியம் என்றும் அழிவதில்லை.

அன்புடன் பாயிஸ்

Saturday, September 10, 2011

காலம் கடந்த காதல்


மொத்த அழகையும்
ஒற்றையழாகாய்
பிரம்மன் செய்த கலையே

பித்துப்பிடித்து
பின்னே அலைகிறேன்
இதோ
என் காதல் காவியத்தின்
சிறு ஓலைத் துண்டு

அலட்சியமாய் வீசிச்செல்லாதே
அளவு கடந்த அன்பு
அதில் தங்கி உள்ளது

எனக்காய் அற்ப நேரமெடு
உனக்காய் விழுந்துகொண்டிருக்கும்
என் உயிரின் நிலையை
இந்த ஓலைகள் உணர்த்தும்

உந்தன் நினைவுகளே
என் ஜீவனின் உயிரோட்டமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது

அந்த நினைவுகளே இன்று
எந்தன் ஜீவராகமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது

என் ராகத்தை வெருக்காதே
அதை விரும்பிச் செவிமடு
அதில் என்னைக்காண்பாய்

இப்போது நீ என்னை
வெறுத்தாலும்
தேடிவரும் காலம்
வெகு தொலைவிலில்லை

அப்போது
என் மடை தாண்டிய கண்ணீர்
தரை சேரும் முன்னே
உன் கைகொண்டு
தாங்கிடுவாய் பெண்ணே

காலம் கடந்த கருணை
பயனற்றுப் போயிற்று

விதி அரங்கேற்றியதை அறியாமல்
நீ தேடிவந்த காதலை
நானின்று தொலைத்து நிற்கிறேன்

காதல் தந்த பரிசியது
கலங்கிப்போன இதயமென்று
நொந்து போனது உள்ளமென்று
மங்கிப்போனது மதியென்று
தன்னையே இழந்து நிற்கிறேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...