Tuesday, January 31, 2012

தொடராத வீணை



பூவையின்
கூந்தலை கோரிய
என் விரல்கள்
கோவை இதல்களையும்
கிள்ளிக்கொள்ள

புழுவாய்த் துடித்து
மெதுவாய் விழுந்தது
தறையில்

வீணையின் வடிவமாய்
தறையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசிக்க

வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதையத்தில் மேலதாளம்

ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன

சுதி நழுவாமல்
சுவை ஏரிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது

பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது

முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...