என்னுயிரில் அறையப்பட்ட
உன் உயிர்ச் சிலுவை
என்றும் இறங்காது பெண்ணே..
உன் உயிர்ச் சிலுவை
என்றும் இறங்காது பெண்ணே..
என்னுயிரில் கலந்த
உயிர் ஓவியம் நீதான்...
என்னுணர்வுகளின்
உயிர் ஆயுதமும் நீதான்..
உயிர் ஓவியம் நீதான்...
என்னுணர்வுகளின்
உயிர் ஆயுதமும் நீதான்..
என்னுடலைக் கிழித்து
உயிர் வாங்கியவளும் நீதான்..
அதை அலையவிட்டு
அழகு பார்ப்பவளும் நீதான்..
உயிர் வாங்கியவளும் நீதான்..
அதை அலையவிட்டு
அழகு பார்ப்பவளும் நீதான்..
முள்ளில் படுக்கையிட்டு
கம்பளியால் தடவுகிறாய்
சுகங்களைக் காணவைத்து
துடிக்கவைக்கும் இன்பமதில்...
கம்பளியால் தடவுகிறாய்
சுகங்களைக் காணவைத்து
துடிக்கவைக்கும் இன்பமதில்...
என்னில் உன்னைப் பதிந்த
சிற்பியாவேன் நான்
நீயோ என்னை சிதைக்கிறாய்
சிற்பியாவேன் நான்
நீயோ என்னை சிதைக்கிறாய்
கள்ளிச்செடி உண்ட உணர்வு
உள்ளத்தில் தெரிகிறது
நரகத்தில் இருந்து கொண்டே
நாட்களை எண்ணுவதாகிறது..
உள்ளத்தில் தெரிகிறது
நரகத்தில் இருந்து கொண்டே
நாட்களை எண்ணுவதாகிறது..
சொல்லாத காதல்
முள்ளில் உறங்கும் உயிராய்
துடித்துக்கொண்டே இருக்கும்
முள்ளில் உறங்கும் உயிராய்
துடித்துக்கொண்டே இருக்கும்
சொல்லி விட்டபின்
காதலின் உயிரை
தீயில் எரித்தாலும்
அது தாங்குமடி பெண்ணே...
காதலின் உயிரை
தீயில் எரித்தாலும்
அது தாங்குமடி பெண்ணே...
No comments:
Post a Comment