வண்டு வந்து
அமர்ந்ததாலா
உன் இதழ்கள்
உதிர்ந்து போயின..
இந்தப் பூ விழியில் யார்
நீர்க்கோலம் போட்டது..
விழிகளதை தாங்கிடுமோ
வலிகழைந்து துளிகளாக்கிவிடு
விதி யாரை விட்டது
துயர் மறந்து தூங்கு..
தேனி உனை ருசித்ததாலா
நீ சிதைந்து போனாய்..
பூவே உன்
இதழ்கள் உதிர்ந்தாலும்..
இழந்தளிர்களென்னவோ
ஆராதிக்கவே செய்கிறது..
நீ மலர்ந்த
தடம் மறந்து
..
புதிதாய் பூத்திடு
மீண்டும்..
அன்புடன் பாயிஸ்
No comments:
Post a Comment