இமைக்கின்ற விழிகளுக்குள்
நீ வீசிச்சென்ற பார்வைகள்
துடிக்கின்ற என்னிதயத்தில்
உயிராய்த்தான் வாழ்கின்றது..!
ஜொலிக்கின்ற உன் நினைவுகள்
நிலாச்சுடராய் பிரசவித்து
என்தேகமெங்கும் படர்கிறது..!
நான் ஈன்றெடுக்கின்ற
உன்னுடனான ஞாபகங்கள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்கின்றன..!
கதறியழும் என் உணர்வுகளை
தூர நின்று வேடிக்கைபார்க்கும்
உன்னுடனான நினைவுச்சிற்பம்
என்கண்ணீரைத் துடைத்துவிடுமா..?
No comments:
Post a Comment