Friday, January 2, 2015

உயிராய் வாழும் நினைவுகள்














இமைக்கின்ற விழிகளுக்குள்
நீ வீசிச்சென்ற பார்வைகள்
துடிக்கின்ற என்னிதயத்தில்
உயிராய்த்தான் வாழ்கின்றது..!

கோகினூர் வைரமாய்
ஜொலிக்கின்ற உன் நினைவுகள்
நிலாச்சுடராய் பிரசவித்து
என்தேகமெங்கும் படர்கிறது..!

நான் ஈன்றெடுக்கின்ற
உன்னுடனான ஞாபகங்கள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்கின்றன..!

கதறியழும் என் உணர்வுகளை
தூர நின்று வேடிக்கைபார்க்கும்
உன்னுடனான நினைவுச்சிற்பம்
என்கண்ணீரைத் துடைத்துவிடுமா..?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...