தலைவனே..
மர்ஹூம் அஷ்ரபே..
நீங்கள் எங்களை விட்டும்
மரணித்திருக்கலாம்
ஆனால் எமதுள்ளத்தில்
ஒழிந்திருந்து வேராய்
வளர்ந்து செல்கிறீர்கள்..
நீங்கள் கடந்து வந்தபாதைகள்
எவ்வளவு கரடுமுரடு என்று
இப்போது உணரமுடிகிறது..
இன்று அப்பாதையில்
எங்களுக்காய் ஒருதலைவர்
இரவு பகலாய் துரத்தப்படுகிறார்..
திரும்பும் திசையெல்லாம்
எரிகற்களால் வீசுகிறார்கள்
எப்படித் தாங்கிக்கொள்வார்..
நாங்கு சுவர்களுக்குள்
ரகசிய அரசியலைச்சொன்னால்
அங்கேயும் முட்டிக்காலிட்டு
விழுந்திடவும் மாட்டார்...
சரியான நேரத்தில்
சரியான முடிவை எடுக்க
சரியான தலைவன் அவரே
பலமுறைகள்
பல உயர்பதவிகளைத் துறந்து
பலமான ஆசனத்தை - எம்
உள்ளத்தில் நட்டிவிட்டார் ..
பேரினவாதிகளின்
கடும்போக்கைக் கண்டு
கடுகளவும் கலங்காதவரே..
நீங்கள் கவனமாய்த்தான்
பயணிக்கிறீர்கள் என்பது
எங்களுக்குப்புரிந்து விட்டது...
மனமாசும் நயவஞ்சகமும்
உங்களைச் சூழ்ந்துகொண்டே
அனிவகுத்துத் துரத்துகிறது..
பல விசஜந்துக்களின் கூடாய்
இன்றைய அரசியல்களமிருக்கிறது
பத்திரமாய் நுழைந்துகொள்ளுங்கள்...
No comments:
Post a Comment