Saturday, May 5, 2012

இருளிலும் விடிகின்ற நீ...


நிலவொன்று நடந்து வருகின்ற அதிசயமும்
அழியாத ஒவியமாய் என்னிதயத்தில்
அதன் பாதச்சுவடுகள் பதிந்து வருகின்ற
இனனோர் அதிசயமும்
காதலில்தான் உள்ளதோ...?
வளர்பிறையும் தேய்பிறையும் - உனது
ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுகிறது
அதேபோல்தான் என்னை அழவைப்பதும்
சிரிக்கவைப்பதும் உனது இன்பமாய்யுள்ளதோ..?
நிலவென்று இதனால்தான் சொன்னார்களா
நீ இருட்டுக்கு மட்டும்தான் அழகானவளா..?
இல்லை என்னிதயத்தின் சுடர் விளக்கு
உன்கை பட்டுத்தான் எரியவிருக்கிறதோ..?
என்நெஞ்சுருண்டைக்குள் சுழன்றுவருகிற
வெண்ணிலாச்சுடர் நீதான் பெண்ணே..
நீ வீசுகின்ற ஒளியில்தான் என்ஜீவனில்
ரீங்காரம் விடாமல் ஒலிக்கிறது பெண்ணே..
என்ஜீவனில் விழுந்து மறைகின்ற
உனது நிலாமுகம் என்னுள்ளத்தை
வெளிக்கின்ற செவ்வானமாய்
மாற்றியமைத்து விடுகிறது பெண்ணே..
என் இருண்டுபோன மதி முழுவதும்
உன் முழுமதி உலா வருகிறது
என் இருளும் ஒளியும்
இனி உன்னால்தான் பெண்ணே..
இருளில் விடிகின்ற நீ
விடிந்ததும் மறைந்து விடாதே
நான் மறையும் வரை இருளாகவே
நீடித்திருப்பேன் பெண்ணே...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...