Saturday, May 5, 2012

மாலையில் “காதல்” உதயமாகிறது...


அந்திச் சூரியன்
மலைகளுக்குள் ஒழிந்துகொள்ள
என் அகத்தின் எண்ணங்கள்
உன்நினைவோடு அலைமோத
என் ஐம்புலங்களின் ஆட்டம்
அடங்கி மௌனித்து விடுகிறது
உன்னை சுமக்கின்ற இதயம்
பார்க்கவும் துடிக்கிறது
ஜன்னலில் மறைந்து செல்லும்
உருவமொன்றை - என்னுயிர்
கண்டிடத் துடிக்கிறது..
என்தேகத்தை ஆழுகின்ற “உயிர்”
உன் மௌனராகத்தில் துடிக்கிறது
நீ இல்லாத நேரங்களானாலும்
உன் தெருவினிலேயே நடப்பதை - என்
உள்ளம் சுகமாய் நினைக்கிறது..
நீ என்னைப் பார்த்துப்போன இடங்களில்
நான் என்னைத் தேடிப்பபார்க்கிறேன்
நீ நடந்து போன இடங்களில்
உன் கால்த் தடங்களைப் பார்க்கிறேன்..
உன்னை நான் காணவரும்
ஒரு நிமிடத்துக்குள்..
ஒரு யுக வாழ்கையை
முடித்துவிட்டுத்தான் வருகிறேன்..
உன்னைக்காணாத இடைவெளிகளுக்குள்
என்னுயிர் நசுக்கப்பட்டு விடுகிறது..
உன்னை நினைக்கின்ற நிமிடங்களில்
ஒரு யுகம் கூட ஒரு சிறுதுளியாகிவிடுகிறது.. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...