Saturday, March 10, 2012

ஒரு கவிஞனின் காதல்



என்கண்களும் உன்நினைவுகளும்
விழுந்துவரும் அவ்வரிகளில்
மீண்டும் மீண்டும்
உன்னையே தேடுகின்றன..

வார்த்தைகள் உன்நினைவோடு
முட்டிக்கொள்ளும் போது
என்பேனா முனைகள்
அவ்வரிகளை தடக்கிவிடுகிறது..

சிலநேரங்களில்
நான் எழுதும்கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிக்கிறது
அப்போது நான் வெட்கித்துப்போவேன்
நீயே என்னைப்பார்ப்பதாய் நினைத்து

கவிதைக்கு அழகு பொய்யென்று
யார்தான் சொன்னது
அதற்கழகே நீதான் பெண்ணே..

என் கவிதையின்
வரிகள் ஒவ்வொன்றிலும்
உன்னைப்பற்றி எழுதுவதனால்
அது அழகு கொள்கிறது...

ஒரு கவிஞனின் அழகு
அவன் காதல்வரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் வீரம்
அவன் புரட்சிவரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் மனம்
அவன் சமூகவரிகளில் தெரியும்

ஆனால் என்னில் தெரிவதல்லாம்
நீயே நீ மட்டுமே....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...