Saturday, January 21, 2012

உறங்கிவிடும் உணர்வுகள்



உன்னைக் கண்டபின்
காலங்களை
நேசிக்களானேன்

சிறகுகளின்றி
விண்னைத்
தொட்டு வந்தேன்

நீ இல்லாதிருந்த
நிமிடங்களை
வெறுத்திருந்தேன்

உன்னோடிருந்த
நிமிடங்களை
ரசித்திருந்தேன்

ஒவ்வொரு வினாடியும்
ஒரு விழாக்கோலமாய்க்
கழிந்து கொண்டது

காதல் கனிய
மணப்பந்தல்
அலங்காரமிட்டது

ஓரிரு வருடங்கள்
ஓஹோன்னு சென்றது

விதி செய்த விளையாட்டு
கடல் கடந்து
தறையில் நீந்துகிறேன்

இளமையின் ஏக்கங்கள்
இலைமறை காயாய்
அழுகிவிடுகிறது

ஆசையும் அரவணைப்பும்
அருந்து விழும்
தொலை  நாடாவில்
பரிமாறப்படுகிறது

இளமையின் துடிப்புகளோடு
உறங்கிவிடும் உணர்வுகள்
எண்ணிலடங்காது

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாகிறது

ஓயாத அலையாய்
முறிந்து விழும்
இன்ப நினைவுகள்
எனதுணர்வுகளை
நனைத்து விடுகிறது

இரவோடு போரடி
அதன் மடியில் தலைசாய்த்து
விழிகளை மூடுவதற்குள்
காலைப்பொழுது
விழித்துக்கொள்கிறது

நாட்களோடு போராட்டம்
நகராத நிமிடங்களென்று
நரகமாகிறது வாழ்கை...


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...