Monday, November 28, 2011

உறங்காத உன் நினைவுகள்



சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்

தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது

உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டலகள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது

உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது

உறக்கத்தின் ஆறம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்

ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது




Sunday, November 27, 2011

எம் தந்தையர்கள்



ஊன் உறக்கம் மறந்து
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்

ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது

இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே

எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?

அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி

மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது

எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்

அன்புடன் பாயிஸ்



மழை



மழை வரும் அறிவுருத்தலை
மேகங்கள் அணிவகுத்து
கொண்டுவருதலில் சொல்லும்

காற்றலைகள் குழலூதி
வரவேற்கும், மின்னொளிகள்
வாணவெடிகளிட்டு வரவேற்கும்

வாணம் மேளதாளமிட்டு
வரவேற்கும், இயற்கை
ஆடி அசைந்து வரவேற்கும்

மனிதனோ வேறுபடுவான்
சிரித்து விளையாட சிறுவன்
புன்னகைத்து வரவேற்பான்
ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ள
பலர் வாவென்று வரவேற்பர்

தினாந்த கூலி மட்டும் சிரித்தபடியே
வந்திட்டியா வாவென்று அழைப்பான்

உன்னால் ஆனந்தம் அதிகம்
அதைவிட அழிவுகளும் அதிகம்
ஆகவேதான் எப்பவும் போல்
அவ்வப்போது வந்து மறைகிறாயோ...?

ஐம்புதங்களின் ஆட்டத்ததை
அணைய வைக்கும் தன்மையும்
ஆனந்தப்படுத்தி அழவைகும்
அதிசிய தன்மையும் உன்னிடமே...

Sunday, November 20, 2011

பிச்சைக்காரன்



குச்சை ஊண்டும் வயதிலும்
குடிசையில் குருட்டு வாழ்கை
குடி வாழ இருட்டில் அடுப்பெரிப்பு

அம்மா என்ற மந்திரச்சொல்
உதடுகளில் தாண்டவமாட
கைகள் நீண்டிடும் அத்தருணம்

கைகள் நீளும் போதுஅக்கணமே
சுயமரியாதையும் உதிர்ந்து விடுகிறது
கூனிக்குருகின்ற பரிதாபமும்
அங்கேதான் நிகழ்கிறது

கொடுப்பவன் மனதிலோ - நான்
கொடையாளன் என்ற கர்வம்
கண்களால் ஏலணப் பார்வை
உதடுகளி்ல் எள்ளிநகைச் சிரிப்பு

ஐயோ பாவமென்று
சிலர் நினைப்பர்
இல்லாதோர் தானும் அவனுடன்
சேர்ந்திடலாமென்று நினைப்பர்

பாவமவர்கள் நிமிர்ந்து நிற்க
தூண்கள் அற்றவர்கள்
விடுகின்ற மூச்சுக்காற்று
யாசகத்தின் பிரதிபலன்கள்

வயிற்றில் பிறந்தவர்கள் வெளிச்சத்தில்
இவர்களைப் பெற்றவர்கள் இக்கஷ்டத்தில்
கண்களில் தீத்தனலோடு தனையன்கள்

வாழ்கை பலகிவிட்டது
வயிற்றுப்பசி வாழ்ந்தாக வேண்டும்
வாசப்படி தாண்டும் நேரம்
நான் சென்று வருகிறேன்

Wednesday, November 16, 2011

ஒரு கொடியில் ஈருயிர்கள்



ஆராரோ ஆரிரரோ
உண்மை உறவின்
உயிரொலி தாயின் தாலாட்டு

தரணியில் நான் பிறக்க
தாயே நீ தாங்கிய
தியாகங்கள் எத்தனை எத்தனை

என் தாயின் தியாகமே நான்.,
நான் எதை தியாகம் செய்தேன்
என்னை ஈண்டவரான அண்ணைக்கு

கருவறையில் நான் வாழும் போது
தன்னை நொநது கொண்டே
என்னை வளர்த்த தாய்

தாயின் தொப்புல் கொடியின்
தொடர்பில்தான் என்னுடல்
உலகுக்குச் சொந்தமானது

ஒரு முள கொடியில்
எனதுயிர் உருவம் பெற
கருவறையிலையே உயிர்
ஊற்றிய உறவு தாய்

எனதுயிர்ப்பாலம் கிள்ளியெறிந்த
ஒரு துண்டு தொப்புல் கொடியே...!
அதில் ஈருயிர்கள் பிறந்தன
நான் பிறக்கையில் என்னுடன்
என் தாயும் பிறந்தார்

அண்ணையே உன்னையே
உறவுகளில் உயர்த்திப்பார்கிறேன்
என்னையும் அப்படியே பார்க்கிறாய்

அண்ணையே உன்
இடைவெளிகள் நிறப்ப
இங்கு வேறேனும்
உயிர்கள் உண்டோ...?


Monday, November 14, 2011

கடல் தாண்டிய உறவுகள்



சொந்தங்கள் சோலைவனம்போமல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை

கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய் சடங்குகளா உறவுகள்..?

மாதங்கள் ஒன்றோ, 
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும் 
தொழை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்

அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு

கட்டணமே இல்லாத 
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும் 
அழைத்திட மனம் நினைத்ததுண்டா

மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று

கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்

கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?

நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒலு துளி அன்பை மட்டுமே ........

இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி


Wednesday, November 9, 2011

நான் தூங்க மறந்த உறக்கம்



கடலலை உரசும் கரையோரம்
என்னினைவுகள் தேங்கி நிற்க
கடலில் பட்டு வரும் காற்றும்
அவள் நினைவுள் தீண்டும் நேரமும்
ஒன்றாகிடவே கடல் மணல்
அவள் மடியாகிறது தேகமதில் சாய்ந்திட

அமைதியாய் ஒரு உறக்கம்
வானம் பார்த்த கண்கள்
வட்ட நிலா காண்கையில்
தேடிச்சென்றன அவள் நினைவுகளை

வானில் ஊர்ந்த மேகங்கள்
என் உறக்கத்தை கலைத்தது
ஊர்ந்த அவள் நினைவுகளோடு

மின்மினித்தோரணங்கள்
அவளின் தேகத்தின் மச்சங்கள்
கிள்ளிப்பார்க்க நீண்ட கைகள்
திரும்பி விட்டன
கலைந்த கனவுகளோடு

விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கலைந்தது உறக்கம்.......

Tuesday, November 8, 2011

மேகமானவளே என்னிதயம்



வறண்ட பாலை நிலம்
இருண்ட என்னிதயம்
மேகமதை தாண்டிடவே
மின்னலோடு தூறல்

இதயத்தில் பனித்தூறல்
மின்னலொலிக்கதிரில்
துளிகள் பட்டுத்தெரிக்கும்
பிரகாசக் காட்ச்சி என்னிதயத்தில்

இதயபூமி பதமாயிருக்கிறது
காதல் விதை கொண்டு வா
அது வளர உரம் என்னிடமிருக்கிறது

மேகமே நீ சிரித்து மறைகிறாய்
என்னிதயமோ உன்னைத்
தேடி வருகிறது - உன்னால்
என் ஜீவன் வாழவேண்டுமென்று

மேகமே உன்னைத்
தொடரும் என்னிதயத்தை
ஆகாயத்தில் தொங்க விடாதே..

அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்

இடைவெளிகளோடு இருந்த
என்னிதயம் நெருக்கமாகிவிட்டது
மேகமே நீ சூழ்ந்து கொண்டதால்

மேகமே நீ கலைந்து விடாதே
என்னிதயத்தில் தூறல் நின்று விடும்
தூறலே நீ நின்று விட்டால்
என்னிதயத் துடிப்பே அடங்கிவிடும்

அன்போடு பாயிஸ்

Saturday, November 5, 2011

ஈதுல் அல்ஹாவே..!


வருகின்ற ஈதுல் அல்ஹாவே
இருதயம் கொண்டு
இன்பமாய் அழைக்கிறோம்
வாரீர் நீர் வாரீர்

எம் விழிகள் திறந்தேயிருக்கிறது
உன் சந்தோச வருகையால்
நிறம்பிடவே அது காத்திருக்கிறது

தரத்தால் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும்
எல்லோர் மனதிலும்
ஒரே நிலையாய் படர்ந்திடுவாயே
பன்பான அல்ஹாவே நீர் வாரீர்

புத்தாடை புதுமணம்
ஏழை எழியோருக்கு அது
ஒரு நாளில் கிடைக்கும்
இன்ப வெகுமதி நீர் வாரீர்

சந்தோசம் உன்நாளில்
கொட்டிக்கிடக்கிறது
பகிர்ந்தெடுக்க நாங்கள்
காத்திருக்கிறோம் வாரீர் நீர் வாரீர்

பத்து ரூபாய்
பங்கிட்டு கொடுக்கையில்
பரவசமாய் இன்று நான்
”எஜமானேன்” ஏழை மனதில்
இனிப்பாய் ஒரு தூண்டல்

உறவுகளால் வீடு
முழுக்க இன்பம்
வீதிகளில் பட்டாசுச்சத்தம்
அனுபவிக்க ஆசை ஏங்குது
வாரீர் நீர் வாரீர்

புதிதாய் ஒரு பார்வை
உச்சி மோர்ந்து ஒரு முத்தம்
ஆறத்தழுவிய அணைப்பு அது
பெற்றோரின் பாசம்
அளவிழந்து காணப்படும் அன்று
வாரீர் நீர் வாரீர்

இதையெல்லாம் அனுபவிக்க
நாங்களும் ஆசை கொள்கிறோம்
கடல் மட்டுமே எங்களுக்கு
தடையாய் இருக்கிறது

கடல் கடந்து ஒரு நேசன்
உன் வருகைக்காய் காத்திருக்கிறான்
உன்னில் அனுபவிக்க
எத்தனை எத்தனை இருக்கிறது
வாரீர் நீர் வாரீர்



அன்போடு பாயிஸ்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...