Sunday, October 30, 2011

7 ம் அறிவு




7 ம் அறிவைப்பற்றி
என்னறிவில் எழுந்த 
ஆதங்க வரிகளெனலாம்


7 ம் அறிவு
ஆண்டவனுடன் ஒரு போட்டி
அறை கூவல் விடுக்கப்பட்ட
எழுத்து வடிவினிலான ஒரு யுத்தம்

7 ம் அறிவு 
ஆறு அறிவுகளையும் மிஞ்சிய
ஆண்டவனின் ஆஸ்த்தியது
மனிதன் சுமக்க முடிந்திராத பாரம்


அதை நாம் நினைக்கையில்
அனைத்து அறிவுகளும்
அழிந்து விடும் அற்பாமாய்


ஏழாம் அறிவை 
ஏட்டில்  ஏற்ற நினைத்த
ஏ.ஆரு முருகதாஸ்
தலைப்போடு நின்று விட்டார்


அவரின் ஆறாம் அறிவில்
அகப்பட்ட இந்த ஏழாம் அறிவு
புதிதாய் காட்டவில்லை 
வியக்கும் படியாய் எதையும்


1400  வருடங்களுக்கு முன்
போதிதர்மன் என்பவரால்
போதித்தித்த ஒரு பாடமாமது
சில உண்மையான சம்பவங்களை
உறக்கச்சொன்ன கதையது


இறந்து விட்ட போதிதர்மனின்
திறமைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்
DNA  பரிசோதனை ஊடாக


DNA  வுடைய கூற்றை 
7 ம் அறிவு சொல்ல வில்லை - அதை
6 ம் அறிவில் விஞ்ஞானம் சொல்லிவிட்டது


7 ம் அறிவு எம்மிலில்லை
ஏகன்பால் தேடிப்பார் 
அதைக் காட்ட வல்ல சக்தி
இங்கு எங்கேனுமில்லை


யார் மனதையும் குடையும் படியாய்
இங்கு இது பிணைக்கப்படவில்லை
நானும் ரசிகனே.....
7 ம் அறிவின் நாயகனுக்கு


அன்போடு பாயிஸ்







Friday, October 28, 2011

மாற்றங்கள் மாற்றி விட்டன


துள்ளித்திரிந்த காலம் - அது
சொர்க்கலோகத்து நேரம்
அதை மீட்டிப்பார்க்கிறேன் - அதை
மிஞ்ச ஒரு காலமில்லை

பொறுப்புகள் சுமத்தப்பட
பொருளாதாரம் ஒழிந்து விட்டது
தேடிப்பார்ப்பதென்று வாழ்வு
தேடத் தொடங்கின

தேடலில் மிஞ்சியது
நான் தேடியவையே...
என்னை விட்டும் போனதை
சொல்ல முடியல்லையே

நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?

அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது

ஆயிரம் சொத்து செல்வம்
இருந்தென்ன பயன்
ஆரத்தழுவ அமைதில்லையே

மாற்றங்கள் மாறி விட்டன
மாறா இந்த வாழ்வு
என்னுடன் ஒட்டிவிட்டன

நெஞ்சை வருடும் அந்த நாட்கள்
கெஞ்சியேனும் கிடைக்குமா..?
சென்று விட்ட நாட்களை
நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்

அன்புடன் பாயிஸ்

Saturday, October 22, 2011

புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..


மனிதம் புதைக்கப்பட்டதால் - இங்கு
ஒரு மாமிசம் புதைக்கப்படுகிறது

வயிருகள் ஒட்டிப்பொகிடவே
உறவுகள் இறந்தே போயிடுமா
தாயானவளின் ஏக்கங்களோடு
இங்கோர் உயிர் பிரிகிறது

வயிற்றுப்பசி போக்க
வக்கத்துப்போன கைகள்
மன் பசி போக்கிட
தன் சிசுவை இறையாக்குகிறாள்

இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டும் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா

குழந்தையை குழியில் இட்ட கைகள்
மூடத்தழுவாத பாச உணர்வு
பதரியழும் மனது - என் நெஞ்சை
கூர்கொண்ட வால்கொண்டு கீருது
உங்கள் உள்ளங்களை கீரவில்லையா..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...