Tuesday, January 31, 2012

மண்ணறை காணும் காதல்


மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனித்திருக்கிறாய்

அந்த மௌனமே
சுட்டெரிக்கும் றவையாய்
என் நெஞ்சை
துளைத்துச் செல்கிறது

சத்தமில்லாத
பாசை கூடவா
உன்னிடம்
ஊணமாகிவிட்டது..?

இப்போதுதான் புரிகிறது
நீ மௌனிப்பதே
என்னைக் கல்லறையில்
காண்பதற்கென்றே..

அப்படியே நான்
மண்ணறையானாலும்
மனம் என்னவோ
வெளியேதான் உள்ளது

அப்போதாவது
ஓரிரு வார்த்தைகளை
பேசி விட்டுச்செல்
சமாதியாவது
சாந்தியாகட்டும்

1 comment:

  1. ம்..கவிதை சோகத்தை தாங்கி வந்திருக்கிறது..சிறப்பு வாழ்த்துகள்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...