Monday, January 23, 2012

பள்ளிக்கூடம்



நெஞ்சை வருடும்
பசுமையான நினைவுகள்
எம் பள்ளிக்கூடக் நாட்களே

அதில் பகிர்ந்து கொண்ட
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு கதை சொல்லும்

அரிவரியில்
கால்த்தடம் பதித்த
முதாலாவது கலைக்கூடம்
எம் பள்ளிக்கூடம்

அறியாமையை
அடியோடு கிள்ளியெரியும்
அன்பு ஆசான்கள்

பள்ளிப்பருவத்தில்
நட்பை பகிர்ந்து கொண்ட
பள்ளி நண்பர்கள்

பக்கத்து பக்கத்து மேசையில்
பாசத்தைப் பரிமாரிக்கொண்டே
பகிர்ந்து கொண்ட பாடங்கள்

யாருமே இல்லாத நேரம்
வகுப்பறையை இரண்டாக
புறட்டிப்போட்ட காலங்கள்

கூடி நின்று
அறட்டையடிக்க
நிழல்தரும் மரங்கள்

கொஞ்ச நேரத்துக்குள்
கொள்ளை ஆசையாய்
விளையாடி மகிழ்ந்த
விளையாட்டுக்கள்

யாரும் இல்லாத இடங்களில்
மனதுக்கு பிடித்தவளுடன்
நெஞ்சு படபடக்க
கதைத்து நின்ற நிமிடங்கள்

பரிட்சை நேரத்தில்
விழுந்து விழுந்து பாடங்களை
மீட்டிக்கொண்ட நாட்கள்

தேர்வின் முடிவுகளை
கையில் வாங்கி
உறைந்து போன நாட்கள்

பிரிவு என்பது
தவிர்க்க முடியாது என்பதை
உணர்த்திய விடுகை விழா

எல்லாம் நடந்து
எல்லோரும் பிரிந்து
எங்கங்கோ இருந்தாலும்

உள்ளம் பரவசத்தால்
பாய்ந்து பற்றிக்கொள்ளும்
பள்ளி நினைவுகள்
என்றுமே மாறாது மாறாது






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...