Thursday, February 23, 2012

உயிர்க் காதல்



என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் சாஹறா
பெருக்கெடுத்து வருகிறது

நீயென் தோழ்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்

வேதம் நாங்கும் விளக்கவில்லை
உன்போன்ற காதலொன்றை
அதை நானிங்கு படிக்கிறேன்
உயிருள்ள வேதமொன்றில்

உலகோடு எல்லாமே அழிந்துவிடும்
உன்மீது நான் கொண்ட காதல்
அழியாத உயிர்க்காவியமாய்
மருலோகத்திலும் உயிர்வாழும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...