Thursday, February 16, 2012

விடைகண்ட நிமிடங்கள்



நிலவொளியில் நிழலாட
தொட்டம் தொட்டமாய் இருலாடும்
இருலாடும் இடமெல்லாம்
நான் மறைந்தாடிச் செல்வேன்

எதிர்பார்த்த இரவுக்கிளி
நிலவோடு கதைபேசி
நலவின் ஆயுலை
நீடித்துக்கொண்டிருந்தாள்

ஒரு துண்டு இருட்டில்
அவளின் துணியாட
என் கண்விழிகள்
அதைக் கைது செய்தன

கலவரம் இல்லாமல்
அவளும் ஒத்துழைத்தாள்
கைதிட்ட நானோ
காரணம் தேடி நின்றேன்

மேகக் கூட்டத்தினுல்
புகுந்து ஒழிந்து கொள்ளும் நிலா
புதுப் புதுக்காரணங்களை
காட்டிச் சென்றது

பலமாய் வீசிய காற்று
புது வித உணர்வுகளை
தூண்டிச் சென்றது

இயற்கை என்னோடு
விளையாடிச் செல்ல
இருலோடு ஒட்டியிருந்தவளோ
என் தோழில் சாய்ந்து - என்
உலகமே நீதான் என்றால்

விலங்கிட்ட என் மனமோ
விடுதலையை
அறிவித்துச் சென்றது






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...