Wednesday, November 16, 2011

ஒரு கொடியில் ஈருயிர்கள்



ஆராரோ ஆரிரரோ
உண்மை உறவின்
உயிரொலி தாயின் தாலாட்டு

தரணியில் நான் பிறக்க
தாயே நீ தாங்கிய
தியாகங்கள் எத்தனை எத்தனை

என் தாயின் தியாகமே நான்.,
நான் எதை தியாகம் செய்தேன்
என்னை ஈண்டவரான அண்ணைக்கு

கருவறையில் நான் வாழும் போது
தன்னை நொநது கொண்டே
என்னை வளர்த்த தாய்

தாயின் தொப்புல் கொடியின்
தொடர்பில்தான் என்னுடல்
உலகுக்குச் சொந்தமானது

ஒரு முள கொடியில்
எனதுயிர் உருவம் பெற
கருவறையிலையே உயிர்
ஊற்றிய உறவு தாய்

எனதுயிர்ப்பாலம் கிள்ளியெறிந்த
ஒரு துண்டு தொப்புல் கொடியே...!
அதில் ஈருயிர்கள் பிறந்தன
நான் பிறக்கையில் என்னுடன்
என் தாயும் பிறந்தார்

அண்ணையே உன்னையே
உறவுகளில் உயர்த்திப்பார்கிறேன்
என்னையும் அப்படியே பார்க்கிறாய்

அண்ணையே உன்
இடைவெளிகள் நிறப்ப
இங்கு வேறேனும்
உயிர்கள் உண்டோ...?


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...