Wednesday, January 25, 2012

வீதியில் தேவதை



கழைந்த கூந்தலை
காற்றோடு படரவிட்டு

கால் கொழுசின் ஓசையை
காற்றோடு தவழவிட்டு

சாலையில் - ஒரு
தேவதையின் வருகை

அதனால் சாலைநெடுகே
சங்கிலிப் போராட்டம்

அகிம்சையாய்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது

அவளோ
அமைதியாய் நடக்கிறாள்

என் உணர்வுகளையும்
உரசிச் செல்லும் - இவள்

எந்த ஊருத்தேரோ
என்னதான் பேரோ

கொல்லை கொள்ளும்
கொள்ளை அழகில்

என் இளமையிங்கு
கொழுந்து விட்டெரிகிறது

உயர்ந்த விழிகளோடு
பனியாத என்பார்வைகள்
இவள் செல்லுமிடமெல்லாம்
 தொடர்கிறது

பெண்னே - நீ
சீக்கிரமே மறைந்து விடு

சீறான நிலையிங்கு
நிகழட்டும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...