என்னுயிர் நீங்கிடாது போக
உன் பார்வையாலேயே
என்னுயிரைத் துண்டாடுகிறாய்
உன் பார்வையாலேயே
என்னுயிரைத் துண்டாடுகிறாய்
என் மனதைக் கிள்ளிவிடும்
உன் மௌன பாசையில்
என் நினைவுகளைப் பந்தாடுகிறாய்
உன் மௌன பாசையில்
என் நினைவுகளைப் பந்தாடுகிறாய்
நீ என் நினைவுகளில்
நெருங்கி வந்து நிற்கையில்
மொழிகளை மௌனிக்கச் செய்து
உணர்வுகளை பற்றவைக்கிறாய்
நெருங்கி வந்து நிற்கையில்
மொழிகளை மௌனிக்கச் செய்து
உணர்வுகளை பற்றவைக்கிறாய்
உன் மௌனமே திரையாகிவிட
திறந்திருக்கும் என் இதயவறையோ
உன் விடைவாசல் தேடித்தவிக்கிறது
திறந்திருக்கும் என் இதயவறையோ
உன் விடைவாசல் தேடித்தவிக்கிறது
உன்விழிகளைத் திறப்பதற்குப்பதிலாக
உன் இதயத்தை திறந்துபார்
அதன் அருகினில் என் உராய்வுகள்
வீற்றிருப்பதை நீ உணர்ந்துகொள்வாய்
உன் இதயத்தை திறந்துபார்
அதன் அருகினில் என் உராய்வுகள்
வீற்றிருப்பதை நீ உணர்ந்துகொள்வாய்
மலரிலும் மென்மையானது காதல்
ஆனால் மலையிலும் பாரமானதுமே..
நான் மலையில் மலர்ந்திடவே நினைக்கிறேன்
ஆனால் மலையிலும் பாரமானதுமே..
நான் மலையில் மலர்ந்திடவே நினைக்கிறேன்
“மலர்களை எரிப்பது முறையில்லை” என்று
கவிப்பேரரசு சொன்னது சரியென்றால்
என்னை நீ வதைப்பதும் முறையல்லவே..
கவிப்பேரரசு சொன்னது சரியென்றால்
என்னை நீ வதைப்பதும் முறையல்லவே..
முத்தெடுக்கச்சொல் மூழ்கிப்பார்க்கிறேன்
முள்ளில் உறங்கச்சொல் உறங்குகிறேன்
முகவரி நீயென்றால் எல்லாமே சாத்தியமே
முள்ளில் உறங்கச்சொல் உறங்குகிறேன்
முகவரி நீயென்றால் எல்லாமே சாத்தியமே
“காதல்” எரிகின்ற தீயில்
குளிர்கின்ற சாதனம்
அதில் விறகாய் மட்டும்
என்னை வீசிச்செல்லாதே...
குளிர்கின்ற சாதனம்
அதில் விறகாய் மட்டும்
என்னை வீசிச்செல்லாதே...
No comments:
Post a Comment