காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்
கூடல்கள் இல்லையென்றால்
குடும்பங்கள் குலைந்து
கலைந்து போய்விடுமோ
இதில்
ஊடலில் கண்ட உறவுகளை
என்னவென்று சொல்வதுவோ
தாய் தந்தையரைத் தொட்ட
சாதி சனங்கள் கூட - இன்று
சிதரிப்போய்க் கிடக்கிறது
உறவுகளில்
குருதி ஓட்டத்தையேனும்
காணவில்லையே - இதில்
பாதைகளை எங்கே தேடுவது
“குடும்பம்”
ஒரு கோயிலென்றார்கள்.!
அது கோடி மையில் தூரம்
ஆனதேனோ...?