Saturday, March 10, 2012

ஒரு அக்கினி மேடை



பத்துமாத விசப்பரிட்சையில்
விடைகண்ட வித்துக்கள் நாம்
அவள் எழுதிய விடைகளில்
பிழைகாணாத வினாக்கள் நாம்

எம்மைச்செதுக்க அடிவாங்கும்
தேய்ந்து போன உளியாவாள்..
எம்மை வளர்க்க உருகிப்போகும்
எரிகின்ற மெழுகாவாள்....

எம் கண்கள் அழும்போது
இதயத்தால் அழுதிடுவாள்..
எம்மிதயம் அழும்போது
உயிர் உருகிவிடுவாள்...

தாயே உன்னைத்தாங்கும் சுவனம்
என்னதான் தவம்கள் செய்தனவோ..
நானும் அச்சுவனம் காணவேண்டும்
உன் பாதங்களை மெதுவாக விலக்கு

உனக்கு பணிவிடைசெய்யவே
இன்னொரு யுகம் வேண்டுகிறேன்
என்னைப் படைத்தவனிடம்
அப்போதும் என்பணி தீராது..
தாயே உன்னிடைவெளி நிரப்ப
இத்தரணியில் ஏதேனும் உண்டோ...?

உன்காதல் ஒன்றேதான்
உலகத்தில் உயர்வானது
உன் உறவொன்றேதான்
உலகத்தில் உயிரானது..

உயிர்களுக்கு விலாசமும்
உறவுகளுக்கு சிறப்பும்
உன்னால் ஆனதம்மா..

ஒரு அக்கினி மேடையில்
அறிமுகமானவர்கள் நாம்
அதே மேடையில் இன்றுவரை
ஆடிக்கொண்டிருப்பவள்தான் தாய்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...