Thursday, April 10, 2014

அண்னை ஓர் அதிசயம்


கருவறைக் காவியம்
காலம் முழுதும் எழுதும்
இவள் அதிசயம்

காலச் சுவடுகளில்
ஆதியும் அந்தமுமாய் - அவள்
நாமமே அறையப்பட்டிருக்கும்

அதிசயம் ஆனால் உண்மை
ஆண்டாண்டு காலம் அழைகிறார்கள்
இவள் மடிபோன்ற மெத்தையொன்றை
கண்டு கொள்ளலாமென்று

விஞ்ஞான உலகத்தில்
மெய்ஞானம் கண்ட உண்மை
மாதாவை மிஞ்சவொரு
ஆத்மாவும் இல்லையென்று

வேதங்கள் நாங்கும்
பெருமை கொள்கிறது - உன்
பேரன்பை பொழிவதனால்

அவளின் உயிராய்
நினைக்கும் எம்மை
என்றுமே எம் உயிராய்
மதிப்போம் எம் தாயை

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...