அனுமதிகள் ஏதுமின்றியே
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்
வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்
விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும்
அக்கினிக்குத் தெரியாது
அன்றாடம் நாம் படும் வேதனை....
No comments:
Post a Comment