Monday, November 24, 2014

தொடுகை இல்லாது போனால்....
















ஒரு தினத்தில் ஓரிடத்தில்
பிந்திய பாதிப்பொழுதது
அவனும் அவளும்தான் 

தயக்கம் ஒட்டிக்கொள்ள
தவிப்பு தொடங்களாயின
இடைவெளிகள் நெருக்கமாகி
பெருமூச்சுக்கள் உரசளாயின

நீங்காமலும் தீண்டாமலும்
முனகள்கள் தீட்டப்பட்டு
தேனாய் ருசிக்களாயின
தேனியின் இறக்கையாய்
உணர்வும் உடலும்.
படபடப்பாய்த் துடிக்களாயின

முதுமை குன்றாத பருவம்..
மூச்சுக்காற்றின்னூடாய்
தேகம் சூடேறிப்போக
உதடுகளும் வறண்டு போக
உணர்வுகள் தாண்டவமாடின

நிமிர்ந்த ரோமங்கள்
சிலிர்க்க ஆரம்பித்தன
ஓரடி இடைவெளிக்குள்
ஓராயிரம் கதைகள் சொல்லின

உள்ளத்தில் பலவித ராகங்கள்
விரல்களில் வீணையின் பாகங்கள்
ஸ்ருதி தாளம் சேராத பாடல்
அரங்கேற்றம் ஆயின

ஈருயிர்களுக்குமிடையில்
ஈர்ப்புகள் அறுந்துவிழ...
கூடல்கள் இல்லாதுபோயின
இன்பங்கள் இறந்துபோயின

உணர்வலைகளோ  ஊஞ்சலின் 
இரு கயிறாய் அங்குமிங்கும்
அலைந்து கொண்யேயிருக்களாயின்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...