Sunday, April 6, 2014

விலைபோன இரவுகள்















ஒவ்வொரு இரவுகளும்
வெவ்வேறு போர்வைகளுக்குள்
ஒழிந்துதான் கொள்கிறது

ஒவ்வொரு விடியலும்
சுமைகளத் சுமந்துதான்
உதயமாகிக் கொள்கிறது

காலத்தின் தேவையால்

உடலோ ரணங்களை
சுமக்கத்தான் செய்கிறது

இரக்கமற்ற இரவுகளோ
 தனிமைப்படுத்தியதுமில்லை
இரங்காத மனங்களோ - இறுகத் 
தழுவிக்கொள்ள மறுத்ததுமில்லை

இனி அவளின் கல்லறையில்
இரவுகளுமில்லை விடியலுமில்லை
இன்றிலிருந்துதான் இவள்
தனியாக உறங்கப்போகிறாள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...