உனக்காய் காத்திருக்கிறேன்...
மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!
காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்
வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு
நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?
இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...
என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…
No comments:
Post a Comment