Friday, December 30, 2011

விதி....


பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது

பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்

தன்னை
எரி்ந்து கொண்டே
மற்றவர்களுக்கு
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்தியை
மனிதன் செய்தான்

அது எரிகிறதென்பதால்
வெளிச்சத்தை அனுபவிக்கும்
மனிதர்களென்ன
பொல்லாதவர்களா..?

அல்லது
மெழுகுவர்த்தியை
உண்டுபன்னியவன்
பொல்லாதவனா..?

அல்லது
மெழுவர்த்திதான்
பாவியென்பதால்
எரிக்கப்படுகிறாதா..?

இயற்கை அதுதான்!

ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...