Thursday, August 25, 2011

இனியும் வருமா


குயில் கூவும் சத்தம் கேட்டும்
உம்மாவின் கைகள் தொட்டும் 
எழுந்த நாட்கள


குப்பை கூலன் பெருக்கி
குச்சி தட்டி
குளிர் காய்ந்த நாட்டகள்


வீதீகளும், வீடுகளும்
தூரே இருந்தாலும் 
பள்ளி செல்லும் பாதையில்
பாசத்தை மட்டும் சுமந்து கொண்டு
ஒன்றாய் கூடிச்சென்றோமே 
அந்நத நாடகள்


வாரத்தில் இரண்டு நாட்கள் 
என்ன செய்தென்றரியாது 
ஏதேதோ செய்தோமே அந்த நாட்கள்


கடலலைபோன்ற என்னங்களோடு
காடு, மேடு கடைத்தெரு 
கள்ளன் பொலிஸ் விளையாட்டன்றெல்லாம்
காலம் எம்முடனே உருண்டு போன நாட்கள்


அந்திசாயும் நேரம் 
அடங்கிவிடும் துடிப்புகளோடு
அணியனியாய் தொடங்கிவிடும்
சிருசிரு வேலைகள்
பள்ளிவாசல் செல்லுதல்
பள்ளிக்கூடத்தில் தந்த வேலைகள்யென்று
அப்படியே பொழுதும் என்னோடு உறங்கிப்போன நாட்கள்


காலம் உருண்டோடவே
கடைக்கண் பார்வையில் பட்டு
உள்ளத்தை தொட்டு
உளமாற நேசித்தவளின்
உள்ளத்தோடு உறவாடி 
உறங்கிப்போன நாட்கள்


காதல் தந்த சுகம்
எதிர்காலத்தை தேடத்தொடங்கியது
உறவுகள் துறந்து 
நட்புகள் இழந்து 
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து 
பார்த்து நின்றவர்களுக்கு 
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்


கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும் 
இலாபமே - என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும் 
பாச உணர்வுகளும்
இனியும்............?





























No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...