Wednesday, August 24, 2011

முதல் மடல்

















நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்


என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்

நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது

பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது

வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்

நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........

என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை

உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...

என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்

இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது

மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...