Thursday, August 25, 2011

ஒரு தலை ராகம்



அவள் விம்பம் பட்டதும்
என் இதயவறை
திறந்து கொண்டது
காதல் என்றார்கள்
அப்போது புரியவில்லை

மீண்டும்
கண்ட இடத்தில்
காணத்துடித்தது
மனது

இதயம் துடித்தது
மனம் ஏங்கலானது

கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று

சொல்ல நினைத்தேன்
காரணமின்றி
காலம் தள்ளிப்போனது

வாழ்ந்து கொண்டே
செத்து மடிவதானது

தேகம்
ரணகளமாய்த் துடித்தது

இதயத்தில்
ஓட்டையென்றார்கள்
அங்கேயே அதிலையே
புதைந்து விட்டது
காதலுடன் என்..........

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...