Wednesday, August 24, 2011

என் குழந்தை

அம்மா தேடி
அழும் போது
அப்பா என்றும் அழுமே!
அப்போது ஆனந்தம்
அளவிழந்து போகுமெ!

பார்ப்போரிடம் சிரித்து
பார்க்காத என்னை
பார்த்துவிட்டால்
உறத்தழுமே!
பாசத்தின் வெளி்ப்பாடிதுவோ?
அடம்பிடித்து அழுதாலும்
அழகாய் இருக்குமே!

கொஞ்சும் மழலை மொழியால்
சி்ன்னதாய்
சத்தம் வெளிப்படுத்தி
உதடு வழியே
எச்சிலில்
என் முகம் நணைக்குமே!


என் மார்பு மிதித்து
மகிழ்ந்து விளையாடுமே!

துருதுருவென
துள்ளியாடும் போது
தட்டாந்தறையில்
தடுக்கி விழுந்து
சொந்தங்கள் தேடுமே!

பாதை வளி செல்லும்போது
என் விரலை
பல விரல்கள்
சூழ்ந்து கொள்ளுமே!
சுமூத்தாக

அடம்பிடித்து
அழுத காலம்
அரங்கேரி விட்டது
அடிச்சுவடில்
தடம் பதிக்க
ஐந்து வயதாகி விட்டது

அப்போதும்
செய்வதரியாது
செஞ்ச தவரை - என்
செவியேற்க மருக்குமே!

என் விரலை விட்டு
அந்த விரல்கள் விரிந்து கொண்டன
திகைத்துக்கொண்டே
விழித்துக்கொண்டேன்
கைக்குழந்தை

கடைக்குழந்தையானதையிட்டு

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...