Saturday, September 10, 2011

காலம் கடந்த காதல்


மொத்த அழகையும்
ஒற்றையழாகாய்
பிரம்மன் செய்த கலையே

பித்துப்பிடித்து
பின்னே அலைகிறேன்
இதோ
என் காதல் காவியத்தின்
சிறு ஓலைத் துண்டு

அலட்சியமாய் வீசிச்செல்லாதே
அளவு கடந்த அன்பு
அதில் தங்கி உள்ளது

எனக்காய் அற்ப நேரமெடு
உனக்காய் விழுந்துகொண்டிருக்கும்
என் உயிரின் நிலையை
இந்த ஓலைகள் உணர்த்தும்

உந்தன் நினைவுகளே
என் ஜீவனின் உயிரோட்டமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது

அந்த நினைவுகளே இன்று
எந்தன் ஜீவராகமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது

என் ராகத்தை வெருக்காதே
அதை விரும்பிச் செவிமடு
அதில் என்னைக்காண்பாய்

இப்போது நீ என்னை
வெறுத்தாலும்
தேடிவரும் காலம்
வெகு தொலைவிலில்லை

அப்போது
என் மடை தாண்டிய கண்ணீர்
தரை சேரும் முன்னே
உன் கைகொண்டு
தாங்கிடுவாய் பெண்ணே

காலம் கடந்த கருணை
பயனற்றுப் போயிற்று

விதி அரங்கேற்றியதை அறியாமல்
நீ தேடிவந்த காதலை
நானின்று தொலைத்து நிற்கிறேன்

காதல் தந்த பரிசியது
கலங்கிப்போன இதயமென்று
நொந்து போனது உள்ளமென்று
மங்கிப்போனது மதியென்று
தன்னையே இழந்து நிற்கிறேன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...