Sunday, November 27, 2011

எம் தந்தையர்கள்



ஊன் உறக்கம் மறந்து
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்

ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது

இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே

எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?

அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி

மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது

எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்

அன்புடன் பாயிஸ்



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...