Monday, November 14, 2011

கடல் தாண்டிய உறவுகள்



சொந்தங்கள் சோலைவனம்போமல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை

கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய் சடங்குகளா உறவுகள்..?

மாதங்கள் ஒன்றோ, 
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும் 
தொழை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்

அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு

கட்டணமே இல்லாத 
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும் 
அழைத்திட மனம் நினைத்ததுண்டா

மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று

கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்

கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?

நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒலு துளி அன்பை மட்டுமே ........

இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...