Tuesday, November 8, 2011

மேகமானவளே என்னிதயம்



வறண்ட பாலை நிலம்
இருண்ட என்னிதயம்
மேகமதை தாண்டிடவே
மின்னலோடு தூறல்

இதயத்தில் பனித்தூறல்
மின்னலொலிக்கதிரில்
துளிகள் பட்டுத்தெரிக்கும்
பிரகாசக் காட்ச்சி என்னிதயத்தில்

இதயபூமி பதமாயிருக்கிறது
காதல் விதை கொண்டு வா
அது வளர உரம் என்னிடமிருக்கிறது

மேகமே நீ சிரித்து மறைகிறாய்
என்னிதயமோ உன்னைத்
தேடி வருகிறது - உன்னால்
என் ஜீவன் வாழவேண்டுமென்று

மேகமே உன்னைத்
தொடரும் என்னிதயத்தை
ஆகாயத்தில் தொங்க விடாதே..

அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்

இடைவெளிகளோடு இருந்த
என்னிதயம் நெருக்கமாகிவிட்டது
மேகமே நீ சூழ்ந்து கொண்டதால்

மேகமே நீ கலைந்து விடாதே
என்னிதயத்தில் தூறல் நின்று விடும்
தூறலே நீ நின்று விட்டால்
என்னிதயத் துடிப்பே அடங்கிவிடும்

அன்போடு பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...