Monday, November 28, 2011

உறங்காத உன் நினைவுகள்



சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்

தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது

உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டலகள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது

உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது

உறக்கத்தின் ஆறம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்

ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...