Friday, December 23, 2011

ஆபாசமாகிறது உன்னால்




வாவென்று அழைப்பதற்கு
ஜாடைகள் தேவையில்லை
குறைந்த பட்ச ஆடைகள் போதும்

அது கண்களுக்கு விருந்தளிக்கும்
உணர்வுகளுக்கு விசமருந்தளிக்கும்

உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள்
அங்கலாய்பில் அழைகின்றனர்

நடந்து கொண்டே
வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே
அபச்சாரம்

நீயோ.!
ஒட்டிய ஒரு துண்டாடையில்
சமுதாயமோ
முட்டிமோதி சீர்குலைகிறது

ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் செல்லும்

போர்த்திய பெண்களை
தீவிரவாதமென்கிறது
திறந்த பெண்களை
நாட்டின் கண்களென்கிறது
வேடிக்கையான விசித்திரம்

”காமக்கயவனால்
இளம் பெண் பழி”
இத்தலைப்பின் கருவே
நீதான் பெண்ணே

நாகரீகத்தின் புனிதம்
நரகமாக்கப்பட்டதால்
நாடே நாசமாகிக் கிடக்கிறது

சிறுபராயத்திலையே ஆபாச ஆசை
அரிவரி மறந்து அங்கமங்கமாய்
உன்னை அளந்து வைத்திருக்கிறான்

வீதிக்கு வீதி ஜன்னல்கள்
பெண்களின் அலங்கார ஆடையது
அதில் வருவது வெற்றிக்கதிர்களா..?
வெரும் வசச்சொற்களே

கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
நீங்கள் உங்களையே எரிக்கிரீர்கள்
நாகரீகமென்ற பெயரில்
ஆபாசம் வேண்டாம்
நாட்டில் நல்ல மான்புகள் நிகழட்டும்...

1 comment:

  1. கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
    நீங்கள் உங்களையே எரிக்கிறீர்கள்..

    உண்மைதான்..வாழ்த்துகள்.

    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...