Monday, December 26, 2011

இருட்டிப்போன உலகம்



உலகத்தாசையில் மனிதன்
அனுதினமும் அழைகிறான்
தன் கடமைதனை மறந்து
அதனோடு செல்கிறான்

அல்லும் பகலும் அனியாயம்
அர்த்தமற்ற செயற்கள்! நியாயம்

நெஞ்சத்தில் வஞ்சுமைகள்
கொஞ்சமேனும் அகமில்லை

பேர்வழி மலிந்து விட்டது
பொன்னான வாழ்வு
ஒழிந்துவிட்டது

உண்மைகளிங்கு
உயிற்று கிடக்கிறது
அதற்குப் புறம்பாக
பொய்களின்று உயிர் வாழ்கிறது

நாணையம்.!
நாக்கிலிருந்து அருந்துவிட்டது
அதனால்தான் என்னவோ
நாலுபேர் சாட்சியிங்கு
தேவையாகிறது

காசி பணம்!
கல்மண்னாகிறது -அவைகள்
கறையான்களுக்கு இறையாகிறது

ஒருவன் குருதியை
ஒருத்தன் ஓட்டுகிறான்
அதனாலிவன் மிருகத்தை
மிஞ்சி நிற்கிறான்

யுகம் முடிய..!
நேரமாகிவிட்டது - அதனால்
யுவதிகளின் வருகையும்
அதிகமாகிவிட்டது

பொருளும் பொன்னும்
பெண்ணுக்கு போதையாகிறது - அதனால்
பொருப்பான வாழ்கையிங்கு
பேதலித்து தத்தளிக்கிறது

விரலுக்கேற்ற வீக்கம்
வீழ்ச்சி கண்டு விட்டது
பொருளுக்கு மேல் பெருமை
மேலோங்கி விட்டது

காலத்தின் நிகழ்வுகளில்
மாற்றங்கள்தான்
எத்தனையெத்தனை..?

கள்ளமும் கபடமும்
கழைந்த காலம்
இனிமேல்தான் பிறக்குமா...?

அன்புடன் பாயிஸ்

1 comment:

  1. பொருளுக்கு மேல் பெருமை
    மேலோங்கி விட்டது..

    நன்றாக சொன்னீர்கள்..


    அன்போடு அழைக்கிறேன்..

    நாட்கள் போதவில்லை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...