Friday, October 28, 2011

மாற்றங்கள் மாற்றி விட்டன


துள்ளித்திரிந்த காலம் - அது
சொர்க்கலோகத்து நேரம்
அதை மீட்டிப்பார்க்கிறேன் - அதை
மிஞ்ச ஒரு காலமில்லை

பொறுப்புகள் சுமத்தப்பட
பொருளாதாரம் ஒழிந்து விட்டது
தேடிப்பார்ப்பதென்று வாழ்வு
தேடத் தொடங்கின

தேடலில் மிஞ்சியது
நான் தேடியவையே...
என்னை விட்டும் போனதை
சொல்ல முடியல்லையே

நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?

அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது

ஆயிரம் சொத்து செல்வம்
இருந்தென்ன பயன்
ஆரத்தழுவ அமைதில்லையே

மாற்றங்கள் மாறி விட்டன
மாறா இந்த வாழ்வு
என்னுடன் ஒட்டிவிட்டன

நெஞ்சை வருடும் அந்த நாட்கள்
கெஞ்சியேனும் கிடைக்குமா..?
சென்று விட்ட நாட்களை
நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்

அன்புடன் பாயிஸ்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...